–  தனுசு

வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டிதனம் ஏனைய்யா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னை
கட்டிக் கொண்டு போய்யா!

முருக்கு மீசை மாமனே!
திறுக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.

எட்டு பத்து சிங்கக்குட்டி
பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த
வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என்
மயிலக்காளை பொன்னையா! .

விடலைக்கோழி விரட்ட
வேட்டைக்காரன் ஓடாதே!
வெட்கப்பட்டு தப்பாதே
வச்சக்குறி மீளாதே!

கடைசி மாமன் பெண்குட்டி
என்னைவிட சிறுகுட்டி-அவள்
மூனுமாசம் முன்னாடி
முடிஞ்சிதய்யா வளைகாப்பு!

ஓலமிதை கேட்பாய்யா-மனக்
கோலம் கான வருவாய்யா -எங்கள்
வாத்தியார் பெயர் சுப்பையா
அவரிடம் சொல்வேன் உஷாரைய்யா!

தப்புத்தாளம் இல்லையா!-இது
தப்புத்தாண்டா இல்லையா!
ஊரைக்கூட்டி சொல்லையா!
ஊமத்துரை பேசய்யா!

நான் பூத்திருக்கும் ரோஜாப்பூ தோட்டம்-நல்ல
கனியிருக்கும் மாம்பழதோப்பு!-இங்கு
காவக்காரன் இல்லாட்டி -நரி
ஊளையிடும் வாலாட்டி.

காடுகரை காக்கும் வேலய்யா!
அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லைய்யா!

 

-தனுசு

 

 

நன்றி: வகுப்பறை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *