காலம் காலமாய்…
கட்டிமுடித்த கோபுரம்
கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது
கோபப்படுவதில் அர்த்தமில்லை..
குறுக்கே நிற்பது காலம்தான்-
கொட்டிக்கிடக்கும் செங்கல்கள்
கோபுரமாகலாம்..
கோபுரம்,
கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்..
மாறுதல்தானே
முகவரி இறைவனுக்கு…!
படத்துக்கு நன்றி
http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11