செண்பக ஜெகதீசன்
கட்டிமுடித்த கோபுரம்
கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது
கோபப்படுவதில் அர்த்தமில்லை..
குறுக்கே நிற்பது காலம்தான்-
கொட்டிக்கிடக்கும் செங்கல்கள்
கோபுரமாகலாம்..
கோபுரம்,
கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்..
மாறுதல்தானே
முகவரி இறைவனுக்கு…!
படத்துக்கு நன்றி
http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…