மலர் சபாuntitled

 

புகார்க்காண்டம் – 08. வேனில் காதை

மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

சற்று முன் அங்ஙனம்
மயங்கி நின்ற மாதவி
மணம் பொருந்திய மலரம்புகளினால்
பெரு நிலம் முழுதும்
தனிச்செங்கோல் செலுத்தி ஆளும்
மன்மதன் அவன் ஆணையால் வருந்தி,
ஒரு திசை மட்டுமல்லாது
உலகமே தொழுது வணங்கி வேண்டும்
அவனது அழைப்பின் அறைகூவலைக்
கடிதம் ஒன்றின் வாயிலாகக்
கோவலனுக்கு அனுப்பத் துணிந்தனள்.

செண்பகம், குருக்கத்தி, பச்சிலை, பித்திகை
வெண்மல்லிகை, மெல்லிதழ் செங்கழுநீர்
இக்தனை நறுமண மலர்களுடன்
சற்றே மாறுபட்ட மணமுடைய
முற்றிய தாழையையும் வைத்துத் தொடுக்கப்பட்ட
தன் கழுத்தில் அணிந்திருந்த
மாலையதனில் இருந்து
வெண்தாழை மடல் ஒன்றை
ஆராய்ந்து எடுத்தனள்.

அத் தாழை மடலைத்
தாள் எனக் கொண்டு
அதனருகில் இருந்த பித்திகை அரும்பொன்றை
எழுத்தாணி எனக் கொண்டு
அதனைக் கொழுவிய
செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்துக்
கடிதம் எழுதவே தொடங்கினள்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 45 – 55
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

படத்துக்கு நன்றி

http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05/article1575464.ece

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *