சுதந்திர தினம் ஆகஸ்ட் – 15 (2013)
சு. கோபாலன்
மாசுபடுத்தப்பட்ட அரசியலும், கறை படிந்த அரசியல்வாதிகளூம் மலிந்துவிட்ட
இந்நாட்களில், சுதந்திர தினத்தன்று, நம் நாட்டின் தன்னலமற்ற தனிப்பெரும்
தலைவர்களாகத் திகழ்ந்து தமிழ் நாட்டுக்கு பெருமை கூட்டிய ராஜாஜியையும்,
காமராஜரையும் நினைவு கூர்ந்து, ஆறுதல் பெறுவோம்.
இருவரும் முற்றிலும் மாறுபட்ட பின்னணியும், பாணியும் கொண்டவர்களாக இருந்தாலும்
தன்னலமற்ற நாட்டுப்பற்றில் ஒருமித்தவராய் இருந்தனர்.
ராஜாஜி
சீரிய நெறிமுறை தனக்கென வகுத்து
சூரிய ஒளிபோல் பளிச்சென வாழ்ந்த
நேரிய வாழ்வு யாவர்க்கும் உதாரணமாம்.
சட்டம் அரசியல் இலக்கியம் என
தொட்ட துறையிலெலாம் துலங்கி நின்று
எட்ட முடியா ஏற்றம் அடைந்து
விட்ட இடம் இட்டு நிரப்ப இயலாதே!
காமராஜர்
ஏட்டுப் படிப்பு அதிகமிலான் கொண்ட
நாட்டுப் பற்றுக்கோ எல்லை இல்லை
மேருவொக்க அரசியலில் உயர்ந்து நின்ற
நேருவுக்கே ஆலோசகனான பெரும் தலைவன்
நலிவுற்ற குடிமக்கள் துயர் நீங்கி
பொலிவுற்ற வாழ்வு பெற உறுதி பூண்டு
எள்ளளவும் தன்னலமின்றி கடைசி மூச்சு
உள்ளளவும் உழைத்த உத்தமத் தலைவன்.
படங்களுக்கு நன்றி: