சு.ரவி
வணக்கம் வாழியநலம்
“இதழ்த்தா மரைக்குள் கரத்தா மரையால்
பதத்தா மரைசுவைக்கும் பாலன்- மிதக்கின்றான்
ஆலிலைப் பாய்மேல்; அவனுங்கள் இல்லத்தில்
காலிணை வைப்பன் கனிந்து.”
“பண்வாய் இடைச்சி பரவசமாய்க் கண்ணனைக்
கண்ணம்மா ஆக்கிக் களிக்கின்றாள்!- எண்ணில்
இகம்பரம் கடந்த பரம்பொருள் இங்கே
திகம்பரமாய் நிற்கின்ற தே!”



Leave a Reply