திருப்பூர் கிருஷ்ணன், அம்பத்தூரில் பேசுகிறார்
அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்திவருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.25க்கு நடக்கிறது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், சிலேடைச் செல்வம் என்ற தலைப்பில் பேச இருக்கின்றார். அனைவரும் வரலாம்! அனுமதி இலவசம்!
இதனை இந்தச் சங்கப் பொறுப்பாளர் சிரிப்பானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் அழைப்பிதழ் இங்கே: