குமரி எஸ்.நீலகண்டன்

இழப்பை இருப்பும்
இருப்பை இழப்பும்
துரத்திக்கொண்டே
இருக்கின்றன.

சிலர் இருப்பது
இழப்பை
ஈடுகட்டவே..

பல இழப்புகளால்
உருவானவையே
சில இருப்புகள்.

இழந்தவை எல்லாம்
எங்கோ
இருந்துகொண்டிருக்கின்றன.

இருப்பவையெல்லாம்
யாரோ இழந்தவையாக
இருக்கலாம்.

இருப்பும் இழப்பும்
சதா இடம் பெயர்ந்துகொண்டே
இருக்கின்றன.

ஒளி
இருட்டை இழப்பதும்
இருட்டு
ஒளியை இழப்பதும்
எதார்த்தம்.

இழந்த ஒளியால்
வீட்டை நிரப்பலாம்
வாசல் திறந்து….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.