நான் அறிந்த சிலம்பு – 87 (02.09.13)

0

மலர் சபாmalathi

தேவந்தியின் வரலாறு சாத்தன் கலை பல பயின்று,   தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்

இங்ஙனம்
மாலதியின் கணவன்
மறையோன் வாரிசாகச்
சாத்தன் வளர்ந்து வந்தனன்.
பிரம்மச்சரிய நிலையில்
கல்வியறிவு கேள்வியறிவில்
சிறந்து விளங்கினன்.
பெற்றோர்கள் இறந்த போது
அவர்தமக்கு ஈமக்கடன்களையும்
செய்து முடித்தனன்.

உறவுமுறைப் பங்காளியரிடம்
வழக்குரைத்து வென்றனன்.
தேவந்தி என்பவளை மணந்து
இல்லறத்தில் அமர்ந்து வாழ்ந்து வந்தனன்.
அப்படி வாழ்ந்து வந்த
ஒரு நாளில்,
தேவந்தியிடம் கூறினன்:
“பூவை ஒத்த உன் கண்கள்
என் தெய்வ வடிவத்தின்
பேரொளியைக் காணப் பொறுத்திருப்பனவாக.”

பின்னர்
மூப்பு எய்தாத தம் இளைய தோற்றத்தை
அவளுக்குக் காண்பித்து
“என் கோயிலுக்கு நீ தினம் வருக..”
எனக்கூறு அவளை விட்டு நீங்கினன்.

தேவந்தி சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்

“என் மனதைக் கவர்ந்த என் கணவன்
திர்த்தத்துறைகளில் நீராடி வரச் சென்றிருக்கிறார்;
அவரை மறுபடியும் இங்கு கொணர்ந்து
என்னுடன் சேர்ப்பாயாக”
என்று சாத்தனை
வேண்டி வழிபடுவதற்காகவென்று
நாள்தோறும் ஒரு பொய்க் காரணம் கற்பித்துத்
தூய மொழியாள் தேவந்தி
அவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனள்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 29 – 39
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

படத்துக்கு நன்றி:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.