“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மர்மப் பாலத்தினூடே நடைபெறும் வாழ்க்கைப் பயணம் புதிரானதுதான்; புதிராக இருக்கின்ற காரணத்தினாலேயே அப்பயணம் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறுகின்றது; இல்லையேல் எத்தனை பேரால் தம் எதிர்காலத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளவியலும்?
வாழ்க்கைப் பயணத்தைச் சுவைபட விவரித்திருக்கும் கவிதை அருமை. பாராட்டுக்கள் மாதவன் இளங்கோ!!
வாழ்க்கை பயணம் எங்கே முடியும் என தெரியாமல் பயணிக்கும் ஒரு மர்மப்பயணம். பயணத்தை முடிக்கையில் தான் முடிச்சுகள் கண்ணுக்குத்தெரியும். நல்லதொரு கவிதையை படிக்க தந்தமைக்கு நன்றி.
அருமையான கவிதை இளங்கோ. நம் கல்லூரி ஆங்கில வகுப்பில் வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி நீ ஆற்றிய உரையை நினைவு படுத்துகிறது கவிதை. வாழ்த்துக்கள்.
அற்புதமான கவிதை!. ரொம்ப ரொம்ப பெரிய விஷயங்களையும், எளிதாக, அநாயாசமாக சொல்வது உங்கள் கவிதைகளின் சிறப்பு என்று தோன்றுகிறது. ‘வெற்றிடம்’ என்ற வார்த்தையோடு முடித்திருப்பது, மிக அருமை!. பாராட்ட வார்த்தைகளில்லை. சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி!
பயணத்தில் சுமை அதிகமிருந்தாலும்,
பாவில் சுவை குறையவில்லை..
நன்று.. வாழ்த்துக்கள்…!
கருத்து தெரிவித்த நண்பர்கள் மேகலா, தனுசு, பார்வதி மற்றும் செண்பக ஜெகதீசன் ஆகியோருக்கு நன்றி!!!
சச்சி, இன்னும் அந்த உரையை நினைவில் வைத்திருக்கிறாயா? 🙂 ‘Life is like an onion! அதை உரித்துக் கொண்டே போகிறோம். இறுதியில் ஒன்றுமே இருப்பதில்லை.’ என்று பேசினேன் என நினைக்கிறேன்.
நீண்ட விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்துக்கு வந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் மின்னஞ்சல்கள் நிரம்பி வழிந்து அவற்றையெல்லாம் வாசித்து, பதிலளிக்கவே ஒரு வார காலமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வல்லமைக்கு வரும்போது இதையே உணர்கிறேன். வல்லமையாளர்களின் பலபல சுவையான படைப்புகள், புதிய படைப்பாளிகளின் ஆக்கங்கள் என மிளிர்கிறது வல்லமை!!!
மர்மப் பாலத்தினூடே நடைபெறும் வாழ்க்கைப் பயணம் புதிரானதுதான்; புதிராக இருக்கின்ற காரணத்தினாலேயே அப்பயணம் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறுகின்றது; இல்லையேல் எத்தனை பேரால் தம் எதிர்காலத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளவியலும்?
வாழ்க்கைப் பயணத்தைச் சுவைபட விவரித்திருக்கும் கவிதை அருமை. பாராட்டுக்கள் மாதவன் இளங்கோ!!
வாழ்க்கை பயணம் எங்கே முடியும் என தெரியாமல் பயணிக்கும் ஒரு மர்மப்பயணம். பயணத்தை முடிக்கையில் தான் முடிச்சுகள் கண்ணுக்குத்தெரியும். நல்லதொரு கவிதையை படிக்க தந்தமைக்கு நன்றி.
அருமையான கவிதை இளங்கோ. நம் கல்லூரி ஆங்கில வகுப்பில் வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி நீ ஆற்றிய உரையை நினைவு படுத்துகிறது கவிதை. வாழ்த்துக்கள்.
அற்புதமான கவிதை!. ரொம்ப ரொம்ப பெரிய விஷயங்களையும், எளிதாக, அநாயாசமாக சொல்வது உங்கள் கவிதைகளின் சிறப்பு என்று தோன்றுகிறது. ‘வெற்றிடம்’ என்ற வார்த்தையோடு முடித்திருப்பது, மிக அருமை!. பாராட்ட வார்த்தைகளில்லை. சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி!
பயணத்தில் சுமை அதிகமிருந்தாலும்,
பாவில் சுவை குறையவில்லை..
நன்று.. வாழ்த்துக்கள்…!
கருத்து தெரிவித்த நண்பர்கள் மேகலா, தனுசு, பார்வதி மற்றும் செண்பக ஜெகதீசன் ஆகியோருக்கு நன்றி!!!
சச்சி, இன்னும் அந்த உரையை நினைவில் வைத்திருக்கிறாயா? 🙂 ‘Life is like an onion! அதை உரித்துக் கொண்டே போகிறோம். இறுதியில் ஒன்றுமே இருப்பதில்லை.’ என்று பேசினேன் என நினைக்கிறேன்.
நீண்ட விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்துக்கு வந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் மின்னஞ்சல்கள் நிரம்பி வழிந்து அவற்றையெல்லாம் வாசித்து, பதிலளிக்கவே ஒரு வார காலமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வல்லமைக்கு வரும்போது இதையே உணர்கிறேன். வல்லமையாளர்களின் பலபல சுவையான படைப்புகள், புதிய படைப்பாளிகளின் ஆக்கங்கள் என மிளிர்கிறது வல்லமை!!!