விநாயக சதுர்த்தி!…
சு.ரவி
வணக்கம்,வாழியநலம்
வேழமுகத்து விநாயகனை,
ஏழிசை அருளிய இறையவனை,
பனிமாமலை மேவிய சிவன் மகனை,
இளையவன் சினமுறக் கனிவென்று,
பின் அவன் மனம் மகிழ்வுற
அருள்செய்தானை,
வளைமுறி எயிறொடு வடமலையில்
வளர் பாரதம் எழுதிய மதகளிற்றை
அரக்கரினத்தை அழித்த களத்தில்
ஆடிய நாயகி பாலகனை- மலர்
நிகர்த்த பதத்தை மனத்தில் இருத்தி வணங்குவோம்!
கற்பனை வளம் கொழிக்கக் காவியம் பாடும் வியாசமுனிவர் முன், ஒரு பள்ளிமாணாக்கனைப்போல் பணிவுடன் அமர்ந்து பாரதத்தை எழுதிப் பதிவு செய்யொம் கணபதியின் எண்ணெய்வண்ண ஓவியம் இணைப்பில்…
கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கி, விநாயகர் மீது நான் எழுதி, நண்பர் ராஜகோபால் பாடிய 8 இசைப்பாடல்களைக் கேட்கலாம்.
பார்க்க, கேட்க, ரசிக்க…