நட்புக்கு இன்னொரு கோணம்
ஜோதிர்லதா கிரிஜா
தன் கணவனின் நண்பன் சபாபதி பணமுடையினால் தனது நிலத்தை விற்பதற்கு இருந்த சேதியைக் கேள்விப்பட்டதிலிருந்து பத்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதை வாங்கிவிட அவளுக்கு ஒரே துடிப்பாக இருந்தது. ‘உயிர் நண்பனாச்சே! சதுர அடிக்கு 200 ரூபாய் குறைச்சுக்குக்கிட்டாருன்னாலும், ரெண்டு லட்சம் சல்லிசாக் கிடைக்குமே!’ என்று அவள் கணக்குப் போட்டாள்.
அன்று மாலை ரகுரவரன் அலுவலகத்திலிருந்து வந்ததுமே தன் தோழி ஒருத்தியிடமிருந்து கேள்விப்பட்டிருந்த அந்தச் சேதியைச் சொல்லிவிட்டு, “என்னங்க! அவர் தான் உங்க பிராண சிநேகிதராச்சே! அசலாருக்கு விக்கிற அதே விலைக்கு உங்களுக்கும் விப்பாரா என்ன! கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்க. சதுர அடிக்கு 200 குறைச்சுக்கிட்டாருன்னாக் கூட ரெண்டு லச்சம் போல நமக்கு ஆதாயம் கிடைக்கும்ங்க. ஆயிரம் சதுர அடியாமே?” என்று அவள் சொன்னதும் அவன் அவளை முறைத்தான்.
“நானும் கேள்விப்பட்டேன். பணமுடையால நிலத்தை விக்கிறவன்கிட்ட நட்புக்காக விலையைக் குறைச்சுக்கன்னு சொல்றது நியாயமாகுமா? ஏன்? அதே நட்புக்க்காக வெளியில விக்கிறதை விட சதுர அடிக்கு 200 அதிகப்படியா நாம குடுக்கலாமே?” என்று அவன் கேட்ட எதிர்க் கேள்வி தந்த அதிர்ச்சியில் பத்மாவுக்கு வாயெழவில்லைந்
நன்றி – குங்குமம்
………
படத்திற்கு நன்றி: