சு.ரவி

 

வணக்கம், வாழியநலம்,

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது மறந்து,தாழ்மையுற்று

வாழ்ந்தநாட்களுக்காக மனம் வருந்தி முறையிட்ட பாடல் இது..

 

ராகம்: திலங்

 

பழுதுபட்டேன், நெஞ்சில் வஞ்சமும் கோபமும்

வளரவிட்டேன், பொய்ம்மையைப்

படரவிட்டேன், ஈன நெறிகளில் சிந்தையைப்

புரளவிட்டென்; வினையெனும்

விழுதுவிட்டேன், இம்மை, மறுமையென் றிரண்டையும்

நழுவவிட்டேன்; தீய்த்திடும்

விரகெனும் ஜ்வாலையில் கண்மூடி நித்தமும்

விறகையிட்டேன்; நின்பதம்

தொழுது நெக் குருகாமல்  தூயவாழ் நாளெலாம்

தொலைத்துவிட்டேன்; இறுதியில்

துணையென்று நின்னையே சார்ந்துவிட்டேன், எந்தன்

துயர்மாற்றி அருளுவாயே!

அழுதுநிற்கும் பிள்ளை அருமறைத் தமிழ்பாட

அமுதம் கொடுத்த் தாயே!

வடமுல்லை வாயிலில் படர்முல்லையே என்னை

வாழ்விக்க வரும் அன்னையே!

இணைப்பில் கர்ப்பரக்ஷாம்பிகை ஓவியம்- close up

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *