வடமுல்லை வாயில் பதிகம்!…3
சு.ரவி
வணக்கம், வாழியநலம்,
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது மறந்து,தாழ்மையுற்று
வாழ்ந்தநாட்களுக்காக மனம் வருந்தி முறையிட்ட பாடல் இது..
ராகம்: திலங்
பழுதுபட்டேன், நெஞ்சில் வஞ்சமும் கோபமும்
வளரவிட்டேன், பொய்ம்மையைப்
படரவிட்டேன், ஈன நெறிகளில் சிந்தையைப்
புரளவிட்டென்; வினையெனும்
விழுதுவிட்டேன், இம்மை, மறுமையென் றிரண்டையும்
நழுவவிட்டேன்; தீய்த்திடும்
விரகெனும் ஜ்வாலையில் கண்மூடி நித்தமும்
விறகையிட்டேன்; நின்பதம்
தொழுது நெக் குருகாமல் தூயவாழ் நாளெலாம்
தொலைத்துவிட்டேன்; இறுதியில்
துணையென்று நின்னையே சார்ந்துவிட்டேன், எந்தன்
துயர்மாற்றி அருளுவாயே!
அழுதுநிற்கும் பிள்ளை அருமறைத் தமிழ்பாட
அமுதம் கொடுத்த் தாயே!
வடமுல்லை வாயிலில் படர்முல்லையே என்னை
வாழ்விக்க வரும் அன்னையே!
இணைப்பில் கர்ப்பரக்ஷாம்பிகை ஓவியம்- close up