புவனேஷ்வர்
சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று
முத்தொளி யன்னநீ வந்தாய் – ஒரு
செந்திரு வன்னாயுன் சோதிமு கங்கண்டு
சிந்தை திறை கொடுத்தேன்;
நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்
வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;
அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்
தேயாத திலகமிட்ட திங்களடி நீ.
நினைக்கின்றேன் உன்னை நான் என்
நினைவினில் வாழ்கின் றாய்நீ;
பனிக்காலப் போர்வை போலும்
இனிக்கின்ற இதம் நீ என்னில்;
காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – உயர்
காதல் நலமெனவே களி நடமிடுவோம்;
காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்
ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

Leave a Reply