மலர்சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*
கவுந்திஅடிகள் ஊழின் வலிமையை எடுத்துக் காட்டியதோடு மதுரை செல்ல இருக்கும்
தமது விருப்பத்தையும் வெளியிடுதல்
அது கேட்ட கவுந்தியடிகள் கூறலானார்
“பாடகம் அணிந்த இவள் சீறடிகள்
பரல் கற்கள் நிறைந்த
பாதையில் செல்வதைப்
பொறுத்திட மாட்டா;
இடையில் காடுகள் நிறைந்த நாட்டினை
நீங்கள் கடப்பதும் ஏற்புடையதாகாது;
நீங்கள் இங்ஙனம் வந்ததை
யாரும் அறிந்திடவில்லையோ?
இவள் இத்தகைய
பயணம் செல்வது ஏற்புடையதன்று;
பயணத்தை விடுத்து
இங்கே தங்கிவிடுங்கள் என்று
நான் கூறினாலும்
நீங்கள் ஏற்கப்போவதில்லை;
குற்றமற்ற உரைகள் பகரும்
அறிவுடைய மாதவர்களின்
உரைகளைக் கேட்பதற்காகவும்
அங்கு இருக்கும் அருகக் கடவுளின்
அடிகளை வணங்கித் தொழவும்
நானும் மதுரை செல்லவேண்டும் என்றிருந்தேன்.
புறப்படுங்கள்! நானும் உங்களுடன்
மதுரைக்கு வருகிறேன்.”
“கோவலன்அடிகளின்வருகையைஉவந்துகூறல்”
இங்ஙனம் உரைத்த கவுந்தியடிகளிடம்
கோவலன் கைகளால் வணங்கிப்பின் கூறினான்:
“அடிகள் நீங்களே அருள்செய்வீராயின்,
வளைந்த வளையணிந்த
தோள்களையுடைய இவளது
துன்பம் எல்லாம் போக்கியவன் ஆவேன்.”
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 51 – 63
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

Leave a Reply