-செண்பக ஜெகதீசன்
உருக்கிய தங்கம்தான்
உருப்பெறுகிறது
விலையுயர் அணிகலனாய்..
அடித்து நீட்டிய செம்புதான்
எடுக்கிறது வடிவு,
மின்கம்பியாக..
உளியால்
உடைபடும் கல்தான்
உருவமாகிறது சிலையாக..
சிந்தித்திடு மனிதா,
சிறிதும் பெரிதுமாய்த் துன்பந்தான்
வாழ்வில்
சிறப்பைத் தருகிறது…!

Leave a Reply