-செண்பக ஜெகதீசன்
உருக்கிய தங்கம்தான்
உருப்பெறுகிறது
விலையுயர் அணிகலனாய்..
அடித்து நீட்டிய செம்புதான்
எடுக்கிறது வடிவு,
மின்கம்பியாக..
உளியால்
உடைபடும் கல்தான்
உருவமாகிறது சிலையாக..
சிந்தித்திடு மனிதா,
சிறிதும் பெரிதுமாய்த் துன்பந்தான்
வாழ்வில்
சிறப்பைத் தருகிறது…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…