இவள் பாரதி
அவள் முகத்திலிருந்து
ஒரு புன்னகை
வரவழைக்க
அதிக பிரயத்தனம்
ஏதும் தேவையில்லை
உங்களிடமிருந்து
ஒரு புன்னகை
வெளிப்பட்டால் போதும்
கொடுக்க நானும்
குடிக்க நீயும்
தவித்துக் கிடக்கிறோம்
கட்டிய பாலை
வெளியேற்ற
தோதான இடமின்றி
யாருமறியாமல் அழுகிறேன்
அலுவலகத்தில்

Leave a Reply