தோல்விப் படிகளில்
ஏறி வந்தேன், வெகு
தொலைவில்
வானம் வெளுத்ததடா !
காலச் சுழற்சியில்
கோள் உருண்டு, எழும்
காலைக் கதிரொளி
பட்டதடா !
கீழே வீழ்ந்தவன்
கால் முறியும், ஆயின்
கிட்டே எனக்கொரு
கோல் தெரியும்.
ஆழக் குழிதனில்
நான் விழுந்தும், எழ
ஆர்வம் நெஞ்சினில்
மேல் எழும்பும்.


Leave a Reply