திருமால் திருப்புகழ் (20)
கிரேசி மோகன்
தானான தானன தானான தானன
தானான தானன -தனதான….
———————————————————————————————————————–
“பாதாள வானுற பாதாதி கேசமும்
தீயான சோணையின் -ரமணேசர்
ஈசான்ய மூலையில் போயான்ம னாய்யுற
நானார்வி சாரணை -உபதேசம்
ஓதாமல் ஓதிய தேகான்ம பாவனை
நாடாது வீடுற -அருள்வாயே
பூபாள வேளையில் கானேகி மாடுகள்
மேயாத போதினில் -குழலூது
கோபால யாதவ கோலோக மாதவ
மாலோல கேசவ -முகிலோனே
சீதாம னோகர ராமாதி வாகர
தீபாவ சீகர -ஒயிலோனே
மாதாபி தாகுரு மூலாத ராமுதல்
தேவாஅ னாஹத -குகைவாழும்
வேதாத யாபர நாதாசு தாகர
கீதாவு பாசன -பெருமாளே”
—————————————————————————————–
படத்திற்கு நன்றி:
http://www.gokranti.com/category/uncategorized/page/2/