சிறுகை அளாவிய கூழ் – 13
இவள் பாரதி
விளம்பரங்களைக்
கண்கொட்டாமல்
பார்க்கும் குழந்தை
தொடர் ஆரம்பித்ததும்
தலை திருப்பிக் கொள்கிறது..
அதுவரை குழந்தையைப்
பார்த்துக் கொண்டிருந்த பாட்டி
கண்ணிமைக்காது
பார்க்கத் துவங்குகிறார்
தொலைக்காட்சித் தொடரை…
—————
அடிக்கடி தத்தி நடப்பதில்
ஆர்வம் கொள்ளும்
அம்மாகுட்டி
அவ்வப்போது இருட்டறைக்குள் சென்று
கொஞ்சம் புன்னகை தூவி வந்துவிடுகிறாள்
ஒளிர்கிறது அந்த வீடு
நள்ளிரவு கடந்தபின்னும்