ஒருபொதுக் கூட்ட மேடையின் செலவு வெறும் 2,500 ரூபாய்

0

எஸ். வி. வேணுகோபாலன்

acs

திருச்சியில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேசுகிறார்.

திருச்சி, ஏப். 17 -தஞ்சை-கந்தர்வக்கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் படாடோபம்-பகட்டாரவாரம் எதுவுமின்றி எளிமையிலும் மிக எளிமையாக நடைபெற்றன என்று `தி இந்து’ நாளிதழ் புகழாரம் சூட்டி யிருக்கிறது. சமீபத்தில் தஞ்சை-கந்தர்வக் கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து தி இந்து நாளிதழின் திருச்சி, புதுகை செய்தியாளர்கள் ஒரு தொகுப்பினை தி இந்து நாளிதழில் வெளியிட்டிருக் கிறார்கள். அதன் சாராம்சம் வருமாறு: எவ்விதமான படாடோபமோ, பகட்டாரவாரமோ இன்றி நடைபெற்ற ஒரு முக்கிய பிரமுகரின் பிரச்சாரம் என்றால் அது திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்தான்.

ராட்சச கட்-அவுட்டுகள் கிடையாது, பெரிய பெரிய பதாகைகள் கிடையாது, டிரம் சத்தம் கிடையாது, மாபெரும் பொதுக்கூட்ட மேடை கிடையாது, எல்லாவற்றிற்கும் மேலாக எங்கேயும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் படவில்லை. நம்பமுடியாதுதான், ஆனால் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் பொதுக்கூட்ட நிகழ் வுகள் அவ்வாறுதான் நடந்தன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலும், திருச்சியிலும் அவர் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அவரைப் போலவே மிகவும் எளிமையுடன் நடந்தன. இவ்விரு இடங்களிலும் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை வேட் பாளராகத் திருச்சி தொகுதியில் போட்டியிடும் எஸ். ஸ்ரீதருக்கு வாக்களிக்குமாறு கோரி உரை நிகழ்த்தினார்.

இவ்விரு இடங்களிலுமே மிகவும் குறைந்த செலவிலான திறந்தவெளி மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் படங் களுடன் ஒவ்வொரு மேடையின் பின்புறமும் ஒரேயொரு ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. மேடையையொட்டி கட்சிக்கொடிகள் பறந்தன. கட்சிஊழியர்கள் சிவப்பு டி-ஷர்ட்டுகளை அணிந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். இவ்விரு இடங்களிலுமே மேடைக்கான செலவு 2500 ரூபாய்க்கும் குறைவு என் பதைக் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “ஒவ்வொரு கூட்டத்திற்கும் மேடை, மைக் செட்டு அமைப்பு,

நாற்காலிகள், மின்விளக்கு வசதிகள் என அனைத்துக்குமே 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்திருக் கிறோம்,’’ என்று வேட்பாளர் எஸ். ஸ்ரீதரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட் டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னதுரையும் கூறினார்கள். மேடையில் மின்விசிறியோ ஏர் கூலரோ கூட வைக்கப்பட வில்லை.தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி முடிவடைந்தபின் மாணிக் சர்க் காரை, கந்தர்வக்கோட்டை நிகழ்ச் சிக்காக அழைத்துச் செல்ல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அவரை அணுகியபோது, கட்சி யின் மாவட்டக்குழுவுக்குச் சொந்தமான காரிலேயே கந்தர்வக் கோட்டை சென்றுவிடலாம் என்று மாணிக் சர்க்கார் கூறியிருக் கிறார். எனினும், “கட்சிக்குச் சொந்தமான கார் சரிவர இயங்காத நிலையில் இருந்ததால், டாக்சி ஏற்பாடு செய்து அவரை அழைத்து வந்தோம்,’’ என்று எம். சின்னதுரை தெரிவித்தார்.

“கூட்டத்தினரிடையே அவர் பேசிக்கொண்டிருக்கையில்கூட பக்கத்திலிருந்த டீக் கடையி லிருந்துதான் 6 ரூபாய்க்கு டீ வாங்கி அவரிடம் கொடுத்தோம். அதைத்தான் அவர் பருகினார். அவருக்கு என்று நாங்கள் செலவு செய்தது அந்த 6 ரூபாய் மட்டுமே,’’ என்று அவர் மேலும் கூறினார்.திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போதும் பொது மக்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. கூட்டம் நடைபெற்ற இடத்தில் கூட போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணிக் சர்க்காருக்கு இசட்பிளஸ் செக்யூரிட்டி தரப்பட் டிருந்தபோதிலும், பாதசாரிகள் எவ்வித இடையூறுமின்றி மிகவும் சுதந்திரமாக பொதுக்கூட்ட மேடையினருகே வரைசெல்வதற்கு அனுமதிக்கப்பட் டிருந்தார்கள்.1998லிருந்து திரிபுராவின் முதல்வராகத் தொடர்ந்து பதவி வகித்து வரும் உருக்கு போன்றமனிதரான மாணிக் சர்க் கார், திருச்சி கூட்டம் முடிந்தபின் திருச்சி ரயில்நிலையத்தில் பிர முகர்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சென்னை செல்லும் ராக் போர்ட் எக்ஸ் பிரசில் ஏறுவதற்கு முன் சாப் பிட்டது என்ன தெரியுமா? ஒரு சில இட்டிலிகள் மட்டுமே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *