எப்படி வந்தாய் உள்ளே என்
இதயக் கருவரைக் குள்ளே
கற்பனை யென்றெனும் உடல் கலக்காமல்
கவிதை யெனும்பெண் கருசிதைக்காமல் – தமிழே ()

பாரத பூமியில் பழம்பெரும் நாடினில்
பாரதி வாணியை யாழுடன் நாவினில்
ஏற்றி நவின்றிடும் வாக்கினில் அருளுடன்
ஏட்டில் பள்ளியில் வல்லமைத் தமிழே()
ஊற்றிட ஊற்றிட உவந்திடும் கள்ளாய்
காற்றிட சுவாசப் பைக்குள் துள்ளாய்
வேற்றிட மென்றெனை வெறுப்பார்க் கில்லாய்
போற்றி புகழ்தரு வல்லமைத் தமிழே ()

மாறுதல் த‌ந்திடும் காலமும் வந்திடும்
ஆறுதல் மொழிகளும் வாழ்த்துகள் சிந்திடும்
ஊறுதல் இன்றினி ஊர்வலம் என்றிடும் – வாகை
தேறுதல் பெற்றிட வல்லமைத் தமிழே()

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *