அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
தனது 200 ஆவது பதிவை வல்லமையில் இன்று வெளியிட்ட ஜெயபாரதன் ஐயாவிற்கு வாழ்த்துகள்.
அன்புடன்
….. தேமொழி
நல்வாழ்த்துக்கள் ஐயா. இருநூறைத் தொடர்ந்து பல நூறு ஆகட்டும்.
வாழ்த்துகள் ஜெயபாரதன் ஐயா!!
வெண்பா எழுத நிறைய பேருண்டு இங்கே. விண்பா எழுத உங்களைவிட்டால் இப்போது இங்கே யார்?
இரட்டை சதம் அடித்துள்ள நீங்கள் இரட்டை சஹஸ்ரம் அடிக்க வாழ்த்துகள்!!
எனது இருநூறாவது ஆக்கத்திற்கு இனிய வாழ்த்துக்கள் அனுப்பிய வல்லமை வலையிதழ்ப் படைப்பாளிகள் தேமொழி, கீதா மதிவாணன், மாதவன் இளங்கோ மூவருக்கும் எனது பணிவான நன்றிகள்.
எண்பது வயதைத் தாண்டிய எனக்கு எல்லாம் வல்ல இறைவனே இன்னும் வல்லமை தர வேண்டுகிறேன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
இருநூறு படைப்புக்கள் தந்த சாதனையாளர் ஜெயபாரதன் ஐயாவிற்கு என் மனம்நிறை பாராட்டுக்கள்!
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து தமிழை வாழவைக்கட்டும்! தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம் தொய்வின்றி!
அன்புடன்,
மேகலா
மனம் நிறைந்த பாராட்டுக்கள் அளித்த மேகலாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
படைத்த இரு நூறுக்கும் படைக்க இருக்கும் பல நூறுக்கும் வாழ்த்துக்கள்.
ஆக்கப்பூர்வமான ஆக்கங்கள்; சுவை மிகுந்த சுவடுகள்; படைப்பின் துடிப்பு, படித்திட இனிப்பு. தொடருக தொண்டு, வாழிய நீண்டு!
அன்பு ஜெயபரதன் ஜி விக்ஞான விஷயமாக பல கட்டுரைகளை எழுதி வருவது மிகவும் பெருமையாக இருக்கிறது . தங்களது படைப்புக்கள் மேலும் தொடர ட்டும் .
என் மனமாந்த வாழ்த்துகள்
இருநூறு படைப்புகளைக் கொடுத்துள்ள திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தங்களது வானியல் கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன்.
பாராட்டுகள் எழுதிய மதிப்புக்குரிய நண்பர்கள் அமீர், அண்ணா கண்ணன், விசாலம் மூவருக்கும் எனது கனிவான நன்றிகள்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
மிக்க மகிழ்ச்சி நண்பர் சச்சிதானந்தம். வாழ்த்துக்கள் அனுப்பியதற்கு என் பணிவான நன்றி.
அன்புடன்
சி. ஜெயபாரதன்.
சாதனையாளர்களுக்கு, இரு நூறு என்று சொல்லுமுன்னே சொல்பவரின் முன்னே முன் நூறு வைத்து முன்னூறும் தாண்டுவார்கள் ! .ஆமாம் அவர்களுக்கு ஆக்க மருந்து ஊக்கம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்த்துகள்
நன்றி நண்பர் சத்தியமணி.
சி. ஜெயபாரதன்