மனம் – பணம்…!
– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
மனம்
கடலைவிட
விசாலமானது!
பணம் –
பிணத்தைவிட துருநாற்றமானது!
துன்பத்தில்
வாழ்ந்தவனுக்கு
வாழ்க்கையின் உயர்வு தெரியாது
மகிழ்வு தெரியாது!
வசதியில்
வாழ்ந்தவனுக்கு
ஏற்றத்தாழ்வு தெரியாது
பசி,கஷ்டம் தெரியாது
படைப்பெல்லாம் இறைப் படைப்பே!
வித்தியாசம்
ஏழை –பணக்காரன்!
பணக்கார வாழ்வில்
ஆரோக்கியமான சுகம் இருக்காது!
ஏழைகள் வாழ்வில்
கோடிப் பணமிருக்காது …!
