–சி. ஜெயபாரதன்.

cover-image-socrates-4

(கி. மு. 469–399)

சாக்ரடிஸின் மரணம்

நாலங்க நாடகம்
அங்கம் : 3

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,”

பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970)

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) படைத்தவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோஃபன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம்

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக்காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் எட்டுவால் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல் களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

அங்கம் -3

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

முதல் காவலன்: எழுந்து நிற்பீர். வருகிறார் ! வருகிறார் ! நீதி மன்ற மாஜிஸ்டிரெட்டுகள் வருகிறார். வழியை மறைக்காதீர் !

[ஃபிளிப் (Philip), ஸைரஸ் (Cyrus), டிரிப்டாலிமஸ் (Triptolemus) மூன்று மாஜிஸ்டிரேட்டுகள் நுழைகிறார். அவரவர் ஆசனத்தில் அமர்கிறார். அவையோர் மூவரையும் கைதட்டி வரவேற்கிறார்.]

ஃபிலிப்: (மேஜையைத் தட்டி) அமைதி ! அமைதி ! நீதி மன்றம் துவங்குகிறது. கொண்டு வாரீர் குற்றவாளியை ! குற்றம் சாட்டியோர் இங்குள்ளாரா ?

லைகான், மெலிடஸ், ஆனிடஸ்: (மூவரும் எழுந்து) ஆமாம் மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே !

(சாக்ரடீஸை இரண்டு காவலர் சங்கிலில் இழுத்து வருகிறார்)

ஃபிலிப்:: (காவலரைப் பார்த்து) கைச் சங்கிலி கால் சங்கிலியை அகற்றுவீர் !

(சாக்ரடிஸ் சங்கிலியை அவிழ்த்ததும் பீடத்தில் ஏறி நிற்கிறார். )

மெலிடஸ்: (சட்டென எழுந்து) கால் சங்கிலியை நீக்காதீர் ! கிழவர் ஓடி விடுவார் ! அவரைக் கண்டுபிடிக்கவே ஏழு நாட்கள் ஆகி விட்டனளெமக்கு ?

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் பருத்த உடம்பைப் பாருங்கள் ! என்னால் ஓட முடியாது. என்னால் நடக்கத்தான் முடியும். நான் தப்பி ஓடி ஏதென்ஸில் எங்கே ஒளிவது ?

மெலிடஸ்: நீவீர் ஓடா விட்டாலும் உமது தோழர் உம்மைத் தூக்கிச் சென்று ஒளித்து வைப்பார்.

ஃபிலிப்:: மெலிடஸ் ! கூறுவாய் ! சாக்ரடிஸ் செய்த குற்றங்கள் என்ன ?

மெலிடஸ்: ஏதென்ஸ் வாலிபர் கெடுப்பு ! தெய்வத் துவேசம் ! தேசத் துரோகம் !

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! இந்த மூன்று குற்றங்களை நீவீர் ஒப்புக் கொள்கிறீரா ?

சாக்ரடிஸ்: எப்படி ஒப்புக் கொள்வது எனக்குப் புரியாத போது ? என் மீது சாட்டிய குற்றங்கள் என்ன என்பது புரிய வில்லை கனம் நீதிபதி அவர்களே ! குற்றம் சாட்டியவர் ஒவ்வொன்றாய் எனக்கு விளக்க வேண்டும் ! நான் அறிவில்லாதவன் ! ஆனால் அறிவைத் தேடுபவன் ! இந்த அறிவில்லாதவனுக்கு அறிவாளிகள் அறிவைப் புகட்ட வேண்டும் !

பிலிப்: சாக்ரடிஸ் ! எங்கே உமது வழக்கறிஞர் ? உமது சார்பில் வாதாட வழக்கறிஞர் இல்லையா ?
சாக்ரடிஸ்: இல்லை, எனக்கு வழக்கறிஞர் இல்லை ! நான் ஏழை கனம் நீதிபதி அவர்களே ! என்னை நான்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் !

மெலிடஸ்: முதலில் பெரிய குற்றம் : ஏதென்ஸ் நகர வாலிபரைக் கவர்ந்தது கெடுத்தது !

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் தோற்றத்தைப் பாருங்கள் ! என் பூத வடிவம் யாரையாவது கவர முடியுமா ? ஏதென்ஸ் நகர வாலிபர் என்னைத் தேடி வருகிறார் ! என்னிடம் கேள்வி கேட்கிறார் ! பதில் தெரியாமல் நான் அவருக்கு வினாக்களைத் தொடுக்கிறேன். அவர் தரும் விடைகளே எனக்கு அறிவைக் கொடுக்கிறது. நானவரைக் கெடுத்தேன் என்பதற்குச் சான்றுகள் கொடுப்பீரா ? எனக்கு அறிவைப் புகட்டியவர் ஏதென்ஸ் வாலிபர் !

மெலிடஸ்: இந்தக் கிழவர் இப்படித்தான் குற்றத்தைக் கூடக் குணப்பாடு போல் மாற்றுவார் ! உண்மையத் திரிப்பார் ! இவர் சொல்வது புளுகு !

சாக்ரடிஸ்: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா ? புள்ளி விபரம் உண்டா ?

பிளிப்: மெலிடஸ் ! சாக்ரடிஸ் யார் யாரைக் கெடுத்தார் ? எத்தனை பேரைக் கெடுத்தார் ? எப்போது கெடுத்தார் ? இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா ?
மெலிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இப்போது அந்தப் பெயர் நிரல் என் கைவசம் இல்லை ! என் வீட்டில் மறந்து வைத்து விட்டேன் ! கொண்டு வரவில்லை. மன்னிக்க வேண்டும் என்னை.

பிளிப்: ஆதாரமில்லாமல் முதல் குற்றம் நீக்கப் படலாமா ?
மெலிடஸ்: நான் அடுத்த வழக்காடல் தினத்தில் கொண்டு வருகிறேன்.

சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதார மற்றது !

***************************

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ ஞானமன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் தீர்க்கதரிசிகள் அல்லது தேவ தூதரிடம் காணப்படும் ஒருவகை உள்ளுணர்வு அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயமாகத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதாரமற்றது ! இதுவரை யாரும் அதற்குச் சான்றுகள் தர வில்லை.

ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! இந்தக் கிழவர் கூறுவது பொய். என் வாலிப மகனைக் கெடுத்தவர் இந்தக் கிழவர். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

மாஜிஸ்டிரேட் ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உங்களுக்கு ஆனிடஸ் மகனைத் தெரியுமா ?

சாக்ரடிஸ்: ஆமாம் தெரியும் எனக்கு. ஒரு சிலநாட்கள் என்னுடன் பழகினான்.

ஆனிடஸ்: அத்துடன் என் மகன் சில நாட்கள் சாக்ரடிஸ் இல்லத்தில் தங்கினான். என் மகனை மயக்கி என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டவர் இந்தக் கிழவர். எங்கள் இல்லத்தை மறக்கும்படி மகன் மீது தனது அறிவுக் கவர்ச்சியை வீசியவர் இந்தக் கிழவர்.

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! ஆனிடஸ் மகனை ஏன் அவனது வீட்டுக்கு அனுப்பவில்லை ?

சாக்ரடிஸ்: அவன்தான் தன் வீட்டுக்குப் போவதை விரும்பவில்லை ! நான் போகச் சொன்னாலும் அவன் போக மறுத்தான்.

ஆனிடஸ்: என் மகனைக் கிழவர் ஏன் தன் வீட்டில் தங்க வைத்தார் என்று கேளுங்கள்.

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! போக மறுக்கும் வாலிபன் கழுத்தைப் பிடித்து என்னால் தள்ள முடியாது. அவன்தான் விரும்பி என்னோடு இல்லத்தில் தங்கினான்.

ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! (தயங்கிக் கொண்டு) சாக்ரடிஸ் இருபால் (Bisexual) இச்சை உள்ளவர் !

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! இது உண்மையா ? நீவீர் இருபால் இச்சை உள்ளவரா ?

சாக்ரடிஸ்: (தயங்கிய வண்ணம்) ஆமாம் நீதிபதி அவர்களே !

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உமக்கும் ஆனிடஸ் மகனுக்கும் முரணான உடற் தொடர்புண்டா ?

சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே !

ஃபிலிப்: நீவீர் உண்மையைச் சொல்கிறீரா ?

சாக்ரடிஸ்: உண்மை ! நான் சொல்வது முற்றிலும் உண்மை ! உண்மை தவிர வேறில்லை ! எனக்கும் ஆனிடஸ் மகனுக்கும் உடற் தொடர்பில்லை !

ஆனிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இந்தக் கிழவரை நான் நம்பமாட்டேன் ! இவர் சொல்து அனைத்தும் பொய். என் மகனைக் கெடுத்தவர் இவர் ! இவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் !

இந்தக் கிழவர் மற்ற ஆடவரிடம் உடலுறவு வைத்திருந்ததை நான் அறிவேன்.

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! நீவீர் வேறு சில ஆடவரோடு உடற் தொடர்பு கொண்டது உண்மையா ?

சாக்ரடிஸ்: உண்மை. ஆனால் ஆனிடஸ் மகனோடு நான் உடற் தொடர்பு கொள்ளவில்லை !

ஆனிடஸ்: கிழவர் பொய் சொல்லித் தப்பிக் கொள்ள முனைகிறார். நீதிபதி அவர்களே ! நம்பாதீர் இவரை ! என் தொழிலில் ஈடுபடாமல் என் மகனைத் தடுத்தவர் இந்தக் கிழவர் !

ஃபிலிப்: ஆனிடஸ் ! உன் தொழில் என்ன வென்று சொல் முதலில் !

ஆனிடஸ்: தோல் பதனிடுவது எனது தொழில் கனம் நீதிபதி அவர்களே ! இவரைச் சந்தித்த பிறகு என் மகன் தோலைத் தொடுவதில்லை ! தோல் செப்பணிடும் தொழிலில் ஈடுபடுவதில்லை.

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! தந்தை செய்யும் தோல் பதனிடும் தொழிலில் மகன் ஈடுபடக் கூடாது என்று நீவீர் தடுத்தீரா ?

சாக்ரடிஸ்: நான் தடுக்க வில்லை கனம் நீதிபதி அவர்களே ! ஆனிடஸ் மகன் மேற்படிப்புக்கு போக விரும்பினான். நான் அதை ஊக்கிவித்தது உண்மை ! ஆனால் அதற்குத் தந்தையுடன் செய்யும் தொழில் இடையூறாக இருக்குமே என்று எச்சரித்தேன். ஆனால் நான் தோல் பதனிடும் தொழிலை விட்டுவிடச் சொல்லி வற்புறுத்த வில்லை ! மேற்படிப்பு முக்கியமா குடும்பத் தொழில் முக்கியமா என்று முடிவு செய்தவன் ஆனிடஸ் மகன் ! நான் அதற்குப் பொறுப்பாளி அல்லன். தந்தையின் தொழில் முக்கிய மென்றால் மகனைத் திருப்பும் பொறுப்பு தகப்பனைச் சார்ந்தது. தகப்பனால் மகனைத் தன் தொழிலுக்குத் திருப்ப முடியவில்லை என்பது உண்மை.

***************************

“மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”

“திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”

“ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”

“சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக் கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உன் இரண்டாவது குற்றச் சாட்டுக்கு என்ன சொல்கிறாய் ? தெய்வ அவமதிப்பு ! அரசாங்க எதிர்ப்பு ! (Blasphemy & Sedition) செய்திருக்கிறாய் நீ. அவற்றைப் பற்றி நாம் காலை முழுவதும் பேசி இருக்கிறோம்.

சாக்ரடிஸ்: காலை முழுவதுமா ? நான் என் வாழ்வு முழுவதும் அவற்றைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்திருக்கிறேன்.

லைகான்: பார்த்தீரா ? வாழ்க்கை முழுவதும் பயங்கர மனிதனாக வாழ்ந்து வந்ததை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் !

நீதிபதி ஃபிலிப்: குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா ?

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் அவற்றைப் பேசினேன் என்பது உண்மை. ஆனால் நான் அவற்றில் ஈடுபட வில்லை. நாட்டுக்காகப் போரிட்டவன் நான் ! நாட்டை எதிர்த்து எதுவும் செய்ய வில்லை நான் ! கடவுளை மதிப்பவன் நான் ! அதன் மீது நம்பிக்கை கொண்டவன் நான் ! கடவுளை அவமதிப்பவன் நான் அல்லன் !

சைரஸ்: புகை உள்ள இடத்தில் தீ இருக்கும் ! கடவுளை மதிப்பவன் தான் ஏதென்ஸின் நாட்டுத் தெய்வங்களை அவமதிக்கிறான்.

சாக்ரடிஸ்: ஆமாம் புகை எங்கிருக்கிறதோ அங்கு தீ இருக்கும் ! உலகத்தின் உன்னத ஞானி என்று புகழப் பட்டவன் இப்போது மூடனாய் இகழப் படுகிறான். ஆனிடஸ் ! தெய்வ அவமதிப்பு என்றால் என்ன என்று விளக்குவாயா ?

ஆனிடஸ்: நான் விளக்க மாட்டேன் ! உமக்கு விளக்க மறுக்கிறேன் !

சாக்ரடிஸ்: ஏன் மறுக்கிறாய் ?

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உன்னை நான் நன்றாக அறிவேன் ! நீ சாமர்த்தியசாலி ! நான் சொல்வதை மடக்கி என் மீதே அதைக் கணையாக ஏவி விடுவாய் நீ ! உன்னிடம் மன்றத்தில் வாதாடினால் நான் தோற்று விடுவேன் ! எனக்குப் புரிந்ததைப் புரியாமல் செய்து விடுவாய் ! பிறகு மன்றத்தார் என்னை பரிதாபமாகப் பார்ப்பார் !

சாக்ரடீஸ்: நீ என்ன பேசுகிறாய் என்று உனக்குத் தெரியாதா ?

ஆனிடஸ்: எனக்குத் தெரியும் நான் பேசுவது. அதுபோல் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் உன்னைத் தவிர !

சாக்ரடிஸ்: வேடிக்கையான குற்றச் சாட்டு ! தெய்வ அவமதிப்பு என்று குற்றம் சாட்டி விட்டு எதிர்வாதிக்கு அது என்ன வென்று சொல்லத் தெரியவில்லை.

லைகான்: சாக்ரடிஸ் ! உனக்குத் தெரியும் ! நீ எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசுபவன்.

டிரிப்தோலிமஸ்: நானும்தான் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்.

சாக்ரடிஸ்: நீ ஒரு வர்த்தகன் ! செல்வம் திரட்டும் வியாபாரி ! உன் உதடுகள் பணக் கடவுளை வழிபடும் ! நீ கடவுளை நினைப்பதன் காரணம் வேறு. நான் கடவுளை நினைப்பதின் காரணம் வேறு. பணத்தைக் குறி வைத்துத் தேடும் நீதான் கடவுளை அவமதிக்கிறாய் ! குணத்தைக் குறிவைத்து நான் கடவுளை நினைக்கிறேன். அது நான் வைத்துள்ள பேரருள் மதிப்பு.

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உண்மையைச் சொல். நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை வழிபடுவதில்லை ! பதிலாக இழிவு படுத்தினீர் ! இல்லையா ? தெய்வ அவமதிப்பு என்றால் ஏதென்ஸ் மக்கள் வணங்கும் தெய்வங்களை நீ முழுக்க முழுக்க நம்பாதது !

சாக்ரடிஸ்: ஏதென்ஸில் அநேக தெய்வங்கள் உள்ளன ! அவற்றில் எந்த தெய்வங்களைக் குறிப்பிடுகிறீர் ?

ஆனிடஸ்: ஏதென்ஸின் உள் நாட்டுத் தெய்வங்கள். வெளிநாட்டுத் தெய்வங்கள் அல்ல.

சாக்ரடிஸ்: உள்நாட்டுத் தெய்வங்கள் எவை ? வெளிநாட்டுத் தெய்வங்களை எனக்குத் தெரியாது.

ஆனிடஸ்: ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தெய்வ நம்பிக்கை உள்ளது !

சாக்ரடிஸ்: உதாரணமாக நான் கேட்கிறேன், எகிப்தியர் நமது தெய்வங்களை நம்புகிறாரா ?

ஆனிடஸ்: இல்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: எகிப்தியர் தெய்வங்கள் நமது தெய்வங்களை விட உயர்ந்தவையா ? அல்லது தாழ்ந்தவையா ? ஆழ்ந்து சிந்தித்த பிறகு பதில் சொல் ஆனிடஸ் !

ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது விசாரணை என் மீதா ? அல்லது சாக்ரடீஸ் மீதா ? கேள்விகள் என் மீது ஏன் வீசப் படுகின்றன ? என்னை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் பிரபு ! இந்தக் கிழவர் என்னை மடக்கிப் போடச் சுற்றி வளைத்து வருகிறார்.

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் இரண்டு வேலை செய்கிறேன். ஒரு புறம் குற்றம் சுமத்தப் பட்டவன் ! மறுபுறம் குற்றவாளிக்காக வாதாடுபவன். என் தரப்பில் நான்தான் எதிராளியைக் கேள்வி கேட்க முடியும் ! சொல் ஆனிடஸ் ! ஏதென்ஸ் உள்நாட்டுத் தெய்வங்களை நான் நம்பா விட்டால் அது தெய்வ அவமதிப்பா ?

லைகான்: பாருங்கள் சாக்ரடிஸே குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் ! உள்நாட்டுத் தெய்வங்களைத்தான் நம்ப வில்லை என்பதை அவரே அறிவிக்கிறார்.

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் எதையும் ஒப்புக் கொள்ள வில்லை. லைகான் ! இதை மட்டும் நான் ஒப்புக் கொள்கிறேன் : ஒன்று எல்லாக் கடவுள்களும் உலகில் பொதுவானவை. நாம் உலகக் கடவுள்கள் அனைத்தையும் நம்ப வேண்டும். உள்நாட்டுக் கடவுளோ வெளி நாட்டுக் கடவுளோ எல்லாம் உலகக் கடவுள்கள்தான். ஏதென்ஸ் கடவுள்களும் அவற்றில் அடங்கும். இதை நம்பும் நான் தெய்வ இகழ்வாளியா ? ஏதென்ஸ் தெய்வங்களை மட்டும் நம்பாமல் உலகில் எல்லா தெய்வங்களையும் நம்பும் நான் ஒரு தெய்வ அவமதிப்பாளனா ?

***************************

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) பெற்றவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! இப்போது தெளிவாகச் சொல்வீர் ! நீவீர் எவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர் ?

மெலிடஸ்: (ஆவேசமாய் முந்திக் கொண்டு) நான் சொல்கிறேன் அவரைப் பற்றி ! பேய், பிசாசு, போலித் தெய்வம் ! பாதி மனிதனும் பாதித் தெய்வமான அரைத் தெய்வம் ! சாக்ரடிஸ் காதிலே எப்போதும் ஏதோ ஓர் அசரீரி ஆன்மா உரையாடுவதாகச் சொல்வார் ! அதுவே அவர் செய்வதை ஆணை இடுவதாகச் சொல்வார் ! அது உண்மையா இல்லையா ? சொல் சாக்ரடிஸ் !

நீதிபதி ·பிளிப்: மெலிடஸ் ! ஏன் குறுக்கே பாய்கிறாய் ? சாக்ரடிஸ் சொல்லப் போவதை யூகித்து நீ கூறுவது வழக்காடல் ஆகாது ! வழக்கு நெறி தவறிய செயல் அது !

மெலிடஸ்: (மீண்டும் குறுக்கிட்டு) நான் சொல்வது உண்மை தானே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: (மெதுவாக, பொறுமையாக) நீதிபதி அவர்களே ! நான் பேய், பிசாசு, போலித் தெய்வங்களை நம்பாதவன் ! அரைத் தெய்வம் என்றால் புரியவில்லை எனக்கு ! ஆனால் ஓர் அசரீரி ஆன்மா என் காதில் எனக்கு ஆணை இடுவது உண்மைதான் ! அதன்படி நடப்பவனும் நான்தான் ! அதன் ஆலோசனகளில் நன்னெறிகள் இருக்கும்.

நீதிபதி ·பிளிப்: அதென்ன அசரீரி ஆன்மா ? எனக்குப் புரியவில்லை.

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) ஆத்மா சுத்தமாக இருப்பவர் காதில்தான் அந்த அசரீரி பேசும் ! அதை ஒரு குட்டிக் கடவுள் என்று வைத்துக் கொள்வீர். அல்லது ஒரு தெய்வத்தின் பிள்ளை என்றும் நினைத்துக் கொள்ளலாம். தப்பாகப் பிறந்த பிள்ளை !

மெலிடஸ்: எமக்குத் தெரியும் அது ! தெய்வத்தின் பிள்ளையை இப்படித் தப்பான பிள்ளை என்று கேலி செய்யும் நீவீர் தந்தையான தெய்வத்தையும் அவமதிக்கிறீர் !

சாக்ரடிஸ்: நான் இந்தப் போலி தெய்வத்தையே நம்பாத போது அதன் பிள்ளையை எப்படி நம்புவேன் ? நான் குதிரையை நம்புகிறேன் ! கோவேறு கழுதையை நம்புவதில்லை.

மெலிடஸ்: தெய்வத்தைக் கோவேறு கழுதைக்கு இப்போது ஒப்பிட்டுக் காட்டுவது கண்டிக்கப் பட வேண்டும் !. கனம் நீதிபதி அவர்களே ! உடனே இவரைக் கண்டித்துத் தண்டிக்க வேண்டும் !

நீதிபதி: நான்தான் இங்கே நீதிபதி ! குற்றதை ஏற்றுக் கொள்ள வைக்காமல் கண்டிப்பதோ தண்டிப்பதோ தவறு ! அதை நிர்ணயம் செய்வது நான் ! மெலிடஸ் ! வாயைத் திறக்காதே அழைக்கப் படாமல் !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது எனக்கு ஓர் விளக்கம் தேவை ! தெய்வம் என்பது என்ன ? யாராவது எனக்கு விளக்கம் தர வேண்டும். இதில் அரைத் தெய்வம் எது ? முழுத் தெய்வம் எது ? மனிதத் தெய்வம் எது ?

ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இத்தகைய வினாக்களைத் தொடராமல் நிறுத்த வேண்டும் ! சாக்ரடிஸ் சாமர்தியசாலி ! இப்படி முதலில் விளக்கம் கேட்பார் ! பிறகு அதிலே பதில் அளிப்பவனை மூழ்க்கிவிடுவார் ! அவரைச் சொல்லாடி யாரும் வெல்ல முடியாது ! இதுவரை யாரும் அவரை வென்றதில்லை !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! எனக்குப் புரியாத ஒரு கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. சொல்லுங்கள் ! கடவுள் என்பது என்ன ? நீங்கள் விளக்கம் தராவிட்டால் என் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருப்பீரா ?

டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! முதலில் இதற்குப் பதில் சொல் ! கடவுளைப் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய் ?

சாக்ரடிஸ்: கடவுள் என்பது ஒன்று ! நான் நம்புவது அந்த ஒற்றக் கடவுளைத்தான் ! பற்பல தெய்வங்களை நான் நம்புவதில்லை ! என் காதில் கேட்கும் பல தெய்வங்கள் புராண நூல்களில் எழுதப் பட்டவை ! இதிகாசக் கதைகளில் காணப்படுபவை ! சில தெய்வங்கள் சினம் கொண்டவை ! சில தெய்வங்கள் செந்நெறி யுடையவை ! சில தெய்வங்கள் மூர்க்கத்தனம் படைத்தவவை ! சில பயங்கரத் தெய்வங்கள் மக்களைக் கொல்கின்றன ! கதைகளில் வரும் அவை யாவும் கடவுள்கள் அல்ல ! அவைதான் பேய்கள், பிசாசுகள் ! நான் அவற்றை நம்புவதில்லை ! இதிகாசக் கதைகளில் நாம் தெரிந்து கொண்ட அந்தத் தெய்வங்கள் நம்மை மகிழ்விக்கவோ, பயமுறுத்தவோ அல்லது துயர்ப்படுத்தவோ சொல்லப் பட்டவை ! நான் அவற்றை நம்புவதில்லை ! நான் நம்புவது உலகம் அனைத்துக்கும் ஒன்றான கடவுளை ! ஒற்றைக் கடவுளை ! புராண நூல்களில் எழுதப்பட்ட அநேகத் தெய்வங்களை அல்ல ! ஆனால் புராண நூல்களில் அந்த ஒற்றைக் கடவுளின் ஒளிவீசலாம். அந்த ஒப்பற்ற கடவுள் இந்தப் பேருலகில் இருக்கிறது. அழகுமயம், சத்திய நெறி, நீதி நெறி (Beauty, Truth & Justice) என்பவை அந்தக் கடவுளுக்கு உள்ள சில பெயர்கள் ! அந்தக் கடவுளுக்கு உள்ள மற்ற பெயர்கள் எனக்குத் தெரியாது ! ஆனால் ஒன்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கடவுள் பிறரிடம் உள்ள நன்னெறிகளைக் காண எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அக்கடவுள் நன்னெறிகளை எனக்குப் புகட்டுகிறது. கடவுளை அறிவது என்று கூறுவது நேர்மை நெறி அதுவென்று அறியப்படுவது. அந்தக் கடவுளை அறியாமல் இருப்பது பாபம் என எண்ணப்படுவது. மனிதரின் பாபத் தவறுகள் மூன்று : வெறுப்பு, பழிவாங்கல், பொறாமை. இதுதான் என் கடவுள் நம்பிக்கை. இதைத்தான் நான் ஏதென்ஸ் நகர் வாலிபருக்குப் பல்லாண்டுகளாய்ச் சொல்லிக் கொடுக்கிறேன். இது உங்களுக்குத் தெய்வத் துரோகமாகத் தெரிகிறதா ? நான் ஏதென்ஸ் வாலிபரைக் கெடுத்தேன் என்பதில் நியாயம் உள்ளதா ?

***************************

“ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்க தரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

சாக்ரடிஸ்: நான் நம்புவதை பிறருக்குச் சொல்லித் தருகிறேன். கடவுளைப் பற்றி அறிவதை உமது சேமிப்புச் செல்வத்துக்கு மேலாக, உயிர் வாழ்வுக்கும் மேலாக மதிக்க வேண்டும். ஏனெனில் சேமிப்புச் செல்வமும், சுகபோக வாழ்வும் நேர்மை நெறியைப் புகட்ட மாட்டா ! கடவுளைப் பற்றி அறியும் உயர்ந்த ஞானமே அவற்றைத் தர வல்லது. நேர்மை நெறியிலிருந்து பொது மனிதப் பண்பாடும் தனி மனிதப் பண்பாடும் உருவாகின்றன. நான் கடவுளைப் பற்றி வாலிபருக்குக் கூறியவை நாட்டுத் துரோகம் என்று கூறப்பட்டால், என்னைக் குற்றவாளி என்பவர் வெற்றி பெற்றவர் ஆவார். நான்தான் தீயவன் ஆவேன். நான் தண்டிக்கபட வேண்டியவன் ஆயினும் அந்தத் தண்டனை என் கருத்துகளை ஒருபோதும் மாற்ற முடியாது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் கடவுளின் நியதியை முறிக்க வில்லை என்று வாதாடுகிறீர். மனிதர் உமது குற்றத்தை மறந்து விட வேண்டும் என்று பிழைத்துக் கொள்ள நினைக்கிறீர். மனிதரோடு கடவுளும் உம்மை மன்னித்து விட வேண்டும் என்று எதிபார்க்கிறீர். அவை ஒருபோதும் நிறைவேறா !

சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறீர் நீதிபதி அவர்களே ?

டிரிப்தோலிமஸ்: இரண்டு கால் மனிதரை நீவீர் வேதாந்த முகில் படிந்த இரண்டு கால் பொதி மூட்டையாய் மாற்றப் பார்க்குகிறீர். ஏதென்ஸ் நகரக் கடவுளை நீவீர் எப்போதும் மதிப்பவதில்லை !

சாக்ரடிஸ்: அது உண்மை நீதிபதி அவர்களே !. வெறுப்பும் பொறாமையும் நிரம்பிய ஏதென்ஸ் நகரத் தெய்வங்கள் எந்தப் புனித மனிதருக்கும் ஏற்றவை அல்ல ! அவற்றைப் புராணக் கதைகளில் ஓய்வெடுக்க விட்டு விடுவீர் !

டிரிப்தோலிமஸ்: இந்த துணிச்சலான தெய்வ அவமதிப்பு சாக்ரடிஸின் தலைக் கர்வத்தைக் காட்டுகிறது. இது தெய்வத் துரோகம் ! தேசத் துரோகம் ! தண்டிக்கப் பட வேண்டிய துரோகம் ! நாங்கள் ஒரு கருவியாய் அதைக் காட்டித் தண்டனையைக் கண்டு களிக்க எமக்கோர் வாய்ப்பு கிடைத்துள்ளது !

லைகான்: கேட்டீரா சாக்ரடிஸ் ? நீதிபதி ஒருவர் இப்போதே உமக்குத் தீர்ப்பளித்து விட்டார் !

சாக்ரடிஸ்: நான் கேட்ட வினாவுக்கு இன்னும் எனக்குப் பதில் கிடைக்க வில்லையே ! உலகக் கடவுள் ஒன்றை நான் மதிப்பது தவறென்று யாரும் கூறவில்லையே ? அந்தக் கடவுள் ஏதென்ஸ் நாட்டுக்கும் தெய்வமே ! அதை நீவீர் நிராகரிக்க வில்லை ! ஆகவே என் போக்கில் தவறில்லை என்பதை நான் சொல்லலாமா ?

லைகான்: பாருங்கள் இந்த வேடிக்கை மனிதரை ! எப்படியெல்லாம் தனது கருத்தைத் திரித்துத் தான் தப்பிக் கொள்ள முனைகிறார் என்று பாருங்கள். ஏதென்ஸ் சும்மா விடாது நம்மை இந்தக் கிழவரை நாமின்று அவிழ்த்து விட்டால் ! குற்றங்களைக் கூறி ஜூரரிடம் விட்டு ஓட்டெடுங்கள் !

(ஒரே ஆரவாரம் ! கூக்குரல் ! “ஓட்டெடுப்பீர்” என்று ஒரே கூட்டொலி ! )

நீதிபதி ·பிளிப்: பயப்படாதே சாக்ரடிஸ் ! உன் சார்பாக நீ வாதாடுவதைத் தொடர் ! உனக்கு ஒன்றும் தீங்கு நேராது இங்கு ! அஞ்சாதே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அச்சம் என்றால் என்ன ? எனக்கு அச்சம் என்றால் என்ன வென்று தெரியாது ! என் எதிர்ப்பாளர் தண்டனையை நான் நீதி மன்றத்துக்கு வரும் முன்னே தீர்மானித்து விட்டார் ! நான் சொல்வது அவரது செவிகளில் நுழைவதில்லை ! அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்னைக் காயப் படுத்தவும் அவர் தயாராக உள்ளார்.

லைகான்: நாங்கள் ஏதென்ஸ் குடிமக்கள் ! எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை !

சாக்ரடிஸ்: (சாந்தமாக) நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்துவீர் ! சிறையில் தள்ளுவீர் ! அல்லது கொன்று விடுவீர் ! ஆனால் யாரும் காயப் படுத்த முடியாது என்னை ! காயப் படுத்துவது உடலையன்று, உள்ளிருக்கும் ஆத்மாவை ! தீய வினை செய்து நீவீர் காயப் படுத்துவது என் ஆத்மாவை இல்லை ! உமது ஆத்மாவை !

லைகான்: ஏதென்ஸ் நகருக்கு எதிராகப் பாபங்களைச் செய்து நீவீர் எவரது ஆத்மாவைக் காயப் படுத்துகிறீர் ?

சாக்ரடிஸ்: நீவீர் பாபங்கள் புரிவது கடவுளுக்கு எதிராக ! எனக்கு எதிராக இல்லை. எனது கடவுள் ஏதென்ஸ் நகரத்தில் இல்லை ! எனது கடவுள் எங்கும் பரவி இருக்கிறார்.

லைகான்: சிந்தித்துப் பேசு சாக்ரடிஸ் ! ஏதென்ஸ் நீ பிறந்த பூமி ! உன் தந்தை நாடு ! மகன் தந்தைக்குச் செய்யும் கடமையைச் செய் ! ஏதென்ஸ் நீரைத் தினமும் நீ அருந்துகிறாய் ! அதில் விளைந்த தானியத்தை உணவாகத் தின்கிறாய் ! உன்னைப் பாதுகாக்கிறது ஏதென்ஸ் ! அதன் கலாச்சாரத்தில் மூழ்கியவன் நீ ! நீவீர் அங்கே உறங்குகிறீர் ! உலவுகிறீர் ! உபதேசம் செய்கிறீர் ! விழித்துப் பார் சாக்ரடிஸ் சாவதற்கு முன் ! பார் உன் நாட்டை ! எப்படி நீ அதைத் தூற்றுகிறாய் சீரழிக்கிறாய் என்று சிந்தித்துப் பார் ?

சாக்ரடிஸ்: சிற்பச் சிலைகள் நிரம்பி யுள்ளது ஒரு நகரைக் காட்டாது ! மனித இதயங்களில் நாடும் வாழ்க்கையும் உள்ளன. சில்லிட்ட சிலைகள் வெறும் சின்னங்கள் மட்டுமே ஆகும் ! லைகான் ! நானும் பார்க்கிறேன் ! ஆனால் நான் ஏதெஸில் காண்பது என்ன ? வாழும் மனிதத் தசைகள் எலும்புக் கூட்டில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நான் காணும் ஏதென்ஸ் உயிரிழந்து கொண்டிருக்கிறது. பளிங்குக் கூண்டு கற்பனைக் காட்சியாக ஏமாற்றிக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் ஒருபோதும் சீராய் இருந்ததில்லை. மனித மூளையில் ஒட்டடை மண்டி உளுத்துப் போயுள்ளது ! அதைத் துடைக்க முயன்றவன் நான் ! என்னை ஒழிப்பதால் அந்த ஓட்டடை நீங்கிப் போகாது ! சிந்தித்துச் செய்வீர் சீமான்களே !

***************************

“நமக்கு ஞானம் உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: ஏதென்ஸ் அரசாங்கத்தை இங்கே குறை கூறுவது சரியில்லை சாக்ரடிஸ் ! உன் மீதுள்ள குற்றச் சாட்டு ஏதென்ஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தாய் என்பதே ! அதை இப்போது ஒப்புக் கொள்கிறாயா ?

சாக்ரடிஸ்: அரசாங்கத்தை எதிர்க்கும் புரட்சி என்றால் என்ன ? எனக்குப் புரியவில்லை நீதிபதி அவர்களே ! நேர்மை நெறியில் இருக்க வேண்டிய அரசாங்கத்தின் கீழான போக்கை எடுத்துக் காட்டுவது புரட்சியா ? சத்தியம் இகழப் படுவதா ? இப்போதைய ஏதென்ஸ் அரசாங்கம் நேரிய நெறியில் மக்களை ஆளுகிறதா ?

நீதிபதி ·பிளிப்: அது உன் பொறுப்பில்லை. பெரும்பான்மை குடிமக்கள் தேர்ந்தெடுத்த ஒன்றை நீவீர் தூற்றக் கூடாது. அதை நீவீர் ஆதரிக்க வேண்டும் !

சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே ! நான் அரசாங்க விதிகளுக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் நான் அதை ஆதரிக்க மாட்டேன் ! பெரும்பான்மைக் குடிமாந்தர் வடித்த அரசாங்கம் தன் வசதிக்கு விதிகளைப் புகுத்தி வைத்திருக்கிறது. இருபது பேரை ஒப்ப வைப்பதை விட ஒருவரை ஒப்ப வைப்பது எளிது. ஆனால் அது இருபது பேர் கூற்றை நியாயப் படுத்துமா ? பலர் நம்புவதால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? எத்தனை ஓட்டுகள் இருந்தால் ஒரு பொய் உண்மையாகும் ? பெரும்பான்மை நபர் ஆதரித்தால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? சொல்லுங்கள் அறிவுமிக்க நீதிபதிகளே ! நான் அறிவற்ற மனிதன், அதுவும் முதிய மனிதன் !

நீதிபதி ஸைரஸ்: யோசித்துப் பார் சாக்ரடிஸ் ! குடிமக்கள் ஆள்வதற்கு உதவி செய்தால்தான் நாம் அரசாள முடியும். அல்லது அது கொடுங்கோல் ஆகும். மறக்காதே இதை. பொது மக்கள் போற்றும் அரசாங்கத்தின் கை, கால், கண் யாவும் கட்டப் பட்டுள்ளன. அதை இங்கும் அங்கும் இழுத்துச் செல்கின்றன பணிய வேண்டிய காட்டுக் கழுதைகள்.

லைகான்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு அரசாங்கத்தை இழிவாகப் பேசுகிறார் சாக்ரடிஸ் ! அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

மெலிடஸ்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டார்களைத் தூற்றுகிறார் சாக்ரடிஸ். ஆம் அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

சாக்ரடிஸ்: தேச நேசர் லைகானைப் போற்றுகிறேன் நான்.

மெலிடஸ்: சாக்ரடிஸ் போக்கை மறுபடியும் நான் கண்டிக்கிறேன்.

சாக்ரடிஸ்: ஓட்டார்களைப் போற்றும் மெலிடஸை நான் பாராட்டுகிறேன்.

மெலிடஸ்: எனது நாட்டுக் குடிமக்கள் மீது நான் கொண்டுள்ள நேசம் அளவில் அடங்காது.

சாக்ரடிஸ்: மெலிடஸ் ! ஆனால் ஏதென்ஸ் நாட்டுக் குடிமக்கள் தவறு செய்த போது நீவீர் தடுத்தீரா ? அல்லது வெறும் எச்சரிக்கையாவது செய்தீரா ? ஆனால் நான் தடுத்தேன் ! அதற்குத் தண்டனை இட்டால் ஏற்றுக் கொள்கிறேன்.

மெலிடஸ்: (எழுந்து நின்று கூக்குரலில்) ஒட்டார்கள் ஒருபோதும் தவறு இழைத்ததில்லை ! அவர் அமைத்த ஏதென்ஸ் அரசாங்கம் உயர்ந்தது ! உன்னத சேவை செய்கிறது !

நீதிபதி சைரஸ்: (கோபமாக) உட்கார் மெலிடஸ் ! நீதிபதி வேலையை நீ செய்ய வேண்டாம். உன் நியாயங்களை நீயிங்கு பரப்பாதே ! வாயைத் திறக்காதே மெலிடஸ் ! (சாக்ரடிஸைப் பார்த்து) சாக்ரடிஸ் ! இப்போது குடிமக்கள் எமக்கிட்ட வேலையை நீவீர் நிறுத்த முயல்கிறீர் !

ஒருவேளை அவர் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் வேண்டியதை யாம் செய்து முடிப்போம். ஆனால் நீவீர் அதைத் தாழ்வு படுத்திப் பெருமைப் படுகிறீர். அரசு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் உம்மை போன்ற வேதாந்திகள் உபதேசிக்கிறார். எமது பொறுப்பு என்ன செய்யலாம் என்பது. உம்மைப் போன்ற சீர்திருத்தவாதிகளுக்கு இரண்டும் வேறு என்பது தெரிவதில்லை !

சாக்ரடிஸ்: சீர்திருத்தவாதிகளின் தொழில் நாட்டைச் சீர்திருத்த வேண்டும் என்பதே ! அதைத் தடுப்பவர் அரசாங்கவாதிகள். குடிமக்கள் மாற்றத்தை விரும்புகிறார். ஆனால் அதை அரசாங்கம் வெறுக்கிறது. புதிதாகப் பொதுநபர் எதைக் கொண்டு வந்தாலும் அதன் முதல் எதிரி அரசாங்கம் ! பெரும்பான்மயோர் தவறாக இருக்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர். அப்படிக் கருதினால் சிறுபான்மையோர் சொல்வதில் நியாயம் இருக்கலாம் ! எத்தனை பேர் எதிர்த்தாலும் சிறுபான்மையோர் பேச உரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் அவரது கூற்றில் உண்மைக் குரல் தொனிக்கிறது. அதுதான் கடவுளின் மெய்ப்பாடு ! நுழையாத உங்கள் செவியில் மெய்ப்பாட்டைத் திணிக்கக் கடவுள் என்னைத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் ! என் பணி கடவுளின் பணி.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: எச்சரிக்கை செய்கிறேன் ! கர்வத்துக்குத் தண்டனை மரணம் தெரியுமா ? நீ கடவுளின் தூதனா ? அப்படி நீ பெருமை அடித்துக் கொள்கிறாயா ? கடவுளுக்கு நீ என்ன உறவினனா ? உன்னையா கடவுள் ஏதென்ஸைத் தூயதாக்க அனுப்பியுள்ளார் ? இதை யாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உன்னைத் தண்டிக்க நீயே தக்க ஒரு காரணத்தைக் கூறி விட்டாய் !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இதை நினைவில் வைத்துக் கொள்வீர் ! நான் இங்கிருக்கிறேன் இப்போது. நாளை இங்கு யார் இருப்பார் என்பது தெரியாது. கடவுள் இருதரம் உமக்கு எச்சரிக்கை செய்யாது ! வாழ்ந்திடு இன்றேல் மாய்ந்திடு என்பதே என் மனக் கோட்பாடு. நீவீர் உம்மை மூடராய் ஆக்கிக் கொண்டால் விடுதலை உணர்ச்சி கொண்ட ஒருவர் உமக்கதைச் சுட்டிக் காட்ட வேண்டும். எனக்கு அந்த சுதந்திரம் உள்ளது ! நான் மனிதத் தவறுகளைக் கண்டால் எடுத்துரைக்கத் தயங்க மாட்டேன் !

***************************

“எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சமும் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்.”

“ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது.”

“பொறாமை என்பது ஆத்மாவின் குடற்புண் (Ulcer).”

“பிறர் உனக்குச் சினமூட்டும் ஒன்றை நீ பிறருக்கு உண்டுபண்ணாதே !

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (ஃபிலிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

ஆனிடஸ்: (எழுந்து நின்று) குற்றச் சாட்டை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் ! மரண தண்டனையே அதற்குத் தகுந்த வெகுமதி !

நீதிபதி ஃபிலிப்: தண்டனை விதிப்பது நீதிபதிகள் ! உட்கார் ஆனிடஸ் ! எமது வேலைக்கு இடையில் புகுந்து உமது தீர்ப்பை அளிக்காதீர் !

சாக்ரடிஸ்: எதற்குத் தண்டனை எனக்கு ? உமது கொள்கைகளை நான் எதிர்ப்பதற்கா ? எந்தக் குற்றத்தையும் நான் இதுவரை ஏற்றுக் கொள்ள வில்லை ! என் மீது பழிசுமத்தியவரே இப்போது தண்டனையும் விதிக்கிறார் அல்லவா ? ஆனிடஸ் ! என்னிடமிருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாய் ? நான் சாதாரணக் குற்றவாளி போல் நிற்பதற்கு ஒரு காலின்றி முடமாய் உள்ளேனா ? நின்று பேசுவதற்கு நிலமின்றி நான் தடுமாறுகிறேனா ? சாதாராணக் குற்றவாளி போல் பெண்டு பிள்ளைகளைக் மன்றத்தில் அழைத்து வந்து நீதிபதிகள் என்மேல் பரிவு காட்ட அழ வைத்திருக்கிறேனா ?

மெலிடஸ்: நாங்கள் ஒருவர் மதிப்பையோ மான நட்டத்தையோ எதிர்பார்ப்பது இல்லை.

சாக்ரடிஸ்: நான் மண்டியிட்டு நியாயத்தை நாடுவேன் என்று நினைத்தீரா ? நியாயத்தை அளிப்பது கடவுள் ! நான் கடவுள் முன்பாகப் பேசுவது போல் கருதுகிறேன். என் மீது நீங்கள் இரக்கப் பட வேண்டாம் ! அனுதாபப் பட வேண்டாம் ! நியாயம் மட்டும் அளித்தால் போதும் ! நான் நியாயத்தை வெகுமதியாக் கேட்க வில்லை. நியாயத்தை எனது பிறப்பு உரிமையாகக் கேட்கிறேன் ! அதே போல்தான் உங்களுக்கும், கடவுளுக்கும் ! நீதிபதி அவர்களே ! ஓட்டெடுத்து எனக்கொரு தீர்ப்புக் கூறுவீர் !

ஆனிடஸ்: உமக்கொரு தீர்ப்பு கிடைக்கும் ! நிச்சயமாகக் கிடைக்கும் ! நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை எள்ளி நகையாடி ஏளனம் செய்தவர் அல்லவா ? வரம்பு மீறி நீவீர் உமது முறையில் விளக்கம் செய்து எமது தெய்வங்களைத் திட்டியவர் அல்லவா ?

சாக்ரடிஸ்: உலக தெய்வத்தை மதிப்பவன் நான் ! ஏதென்ஸ் தெய்வங்கள் எல்லாம் உலகக் கடவுள் ஒன்றில் அடங்குபவை ! ஆதலால் நான் ஏதென்ஸ் தெய்வங்களை அவமதித்தவன் என்னும் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டேன் !

நீதிபதி ஃபிலிப்: சாக்ரடிஸ் ! நீவீர் இப்போது பிரமிட் பீடத்திலிருந்து பேசுகிறீர் !

ஆனிடஸ்: ஆம் சாக்ரடிஸ் எப்போதும் பீடத்தில் நின்றுதான் பேசுவார் ! சாக்ரடிஸ் ! நீவீர் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறீர் ! ஆனால் எமக்குச் சீர்திருத்தம் தேவையில்லை ! நாங்கள் தவறு செய்யும் போதெல்லாம் எங்களை நீவீர் முட்டாள் என்று திட்டுவதை யாம் வெறுக்கிறோம். இங்கே எல்லாருக்கும் முன்பு நீவீர் கூறிய உமது கொடும் வார்த்தைகளே உமக்குக் கடும் தண்டனை விதிக்கும். ஆகவே இந்த மன்றம் உம்மைக் கண்டிக்க ஓட்டெடுக்க வேண்டும் !

நீதிபதி ஃபிலிப்: இரண்டு தரபினரும் ஓட்டெடுக்கச் சொல்லி மன்றத்தை வேண்டியுள்ளார். மன்ற அதிகாரிகளை விளிப்பீர் ஓட்டெடுக்கும் கூடையோடு வரும்படி ! கூட்டத்தில் புகுந்து அவரவர் விருப்பத்தை வாக்கெடுப்பில் அறிந்து வாரீர் !

(இரண்டு இராணுவக் காவலர் வாக்குக் கூடையோடு கூட்டத்தில் நுழைகிறார். வாக்கெடுப்புப் பணி முடிந்த பிறகு காவலர் பெற்ற ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நீதிபதி சைரஸ் எண்ணிக்கையைச் சோதிக்கிறார்.)

சைரஸ்: காவலர் காப்டன் ஒரு தகவல் கொண்டு வந்துள்ளார். நாற்பது பேர் கையெழுத்திட்டு சாக்ரடிசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

நீதிபதி ஃபிலிப்: யார் அனுப்பியுள்ளார் ?

சைரஸ்: கிரிடோ அனுப்பியுள்ளார் ஒரு தூதர் மூலமாக ! கிரிடோவும் சாக்ரடிசுடன் கைது செய்யப்பட வேண்டியவர் ! ஆனால் கிரிடோ மறைமுகமாக இருக்கிறார் !

நீதிபதி ஃபிலிப்: அது எனது தவறில்லை.

சைரஸ்: கிரிடோவும், ஆகாத்தானும் விடுதலையாய் ஒளிந்து உ:ள்ளது வரை சாக்ரடிஸ் மட்டும் சிறைக்குப் போவது சரியில்லை.

ஃபிலிப்: சாக்ரடிஸ் இன்னும் தண்டிக்கப்பட வில்லை. முதலில் எத்தனை ஆதரவு ஒட்டுகள் எத்தனை எதிர்ப்பு ஓட்டுகள் என்று எண்ண வேண்டும்.

(ஃபிலிப் ஆதரவு/எதிர்ப்பு ஓட்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்து மற்ற நீதிபதிகளுக்குக் காட்டுகிறார்.)

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரதிற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை அளித்துள்ளது !

***************************

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

“எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ஃபிலிப்ஸ்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரத்திற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை இப்போது அளிக்கிறது ! உன் முதிய வயதை மன்றம் நினைவில் கொண்டுள்ளது. இளவயதில் நீ தைரியமாய் ஏதென்ஸ் நகருக்காக போர்ப்பணி புரிந்ததையும் நினவிலே வைத்துள்ளது ! இப்போது நீ வறுமையில் வாடுவதையும் மறக்க வில்லை ! வாழ்நாள் பூராவும் நீ மெய்ஞானத்தைத் தேடியே வறுமையில் வீழ்ந்தாய் என்பதும் தெரியாமல் இல்லை ! எப்போதும் நீ நேர்மையாக வாழ்ந்தாய், மிக்க நேர்மையாக வாழச் சொன்னாய் என்பதையும் யாம் அறிந்தோம். இங்கு உன்னைக் குற்றம் சாட்டியோர் கூட உன்னைப் பொய்யன் என்று சொன்னதில்லை. லஞ்சம் வாங்கி மனம் மாறுபட்டதாகக் குறை கூறவில்லை. ஐயமின்றி நீ ஓர் ஞானி. திருச்சபையினர் (Oracle) நீவீர் ஓர் உலக மேதை என்று உனக்குப் புகழாரம் சூட்டினார். உமது கணிப்புக்கு நீவீர் ஒரு பிழையும் செய்யாதவர் என்று எமது முன்பாகக் காட்டிக் கொள்கிறீர் ! நாங்கள் பொது நபர் என்ற முறையில் எங்களுக்கு நீவீர் குற்றவாளியாகத் தெரிய வில்லை ! ஆனால் நீதிபதிகள் என்னும் முத்திரையில் எங்கள் முன்பு நீவீர் ஒரு குற்றவாளியாகத்தான் நிற்கிறீர் ! உமது வழக்கில் எதிர்ப்பு வாதங்கள்தான் முடிவில் உம்மைக் காப்பாற்றப் போகின்றன ! உம் மீது தாக்கப் பட்டக் குற்றச் சாட்டுகளை நீவீர் மறுத்துள்ளீர் ! குற்றம் சாட்டியவரை முட்டாள்கள் என்று சுட்டிக் காட்டி நீவீர் உமது குற்றச் சாட்டுகளை நிராகரித்துள்ளீர் ! சாக்ரடிஸ் ! விதி உமது கண்களைக் குருடாக்கி விட்டது இவைதான் உமது குற்றத்துக்குக் காரணம் என்பதை உமக்குக் காட்டாது. நீவீர் எள்ளி நகையாடி இருப்பதை நோக்கும் போது ஓர் ஞான ஏதேட்சைவாதியாக ஆகியிருப்பதன் காரணம் தெரிகிறது ! உமது உள் நோக்கம் எதுவாக இருப்பினும் சரி இப்போது நீவீர் ஏதென்ஸ் நாட்டின் புரட்சித் தளபதி என்பது தெளிவாகிறது. பாதிக்கப்படப் போவது உமது வாழ்க்கையா அல்லது ஓராயிரம் ஏதென்ஸ் மக்கள் வாழ்க்கையா ? நியாயத்துக்குச் சார்பாக உனக்கு மரணத் தீர்ப்பா அல்லது ஏதென்ஸ் மாந்தர் இன்னல்களா என்று நீவீர் தராசில் நிறுத்துப் பார்ப்பதில்லை ! நியாயம் இருக்கலாம் உமது எதிர்ப்பு வாதங்களில் ! ஆனால் நீதிபதிகளான நாங்கள் பாரபட்சம், பரிவு, ஓரவஞ்சகம் காட்ட முடியாது ! பரிவோடிருந்தால் நாங்கள் உமக்காக ஓராயிரம் நபருக்குப் பாதகம் இழைக்க வேண்டும் ! உமக்குப் பாரபட்சமா ? ஏராளமான ஏதென்ஸ் மக்களுக்கு ஓரவஞ்சகமா ? இதுதான் எங்கள் மனப் போராட்டம் ! சாக்ரடிஸ் ! ஓட்டெடுப்பு விளைவை இப்போது வெளியிட விரும்புகிறேன் ! 242 பேர் உனக்கு எதிராகவும் 185 பேர் உனக்கு ஆதரவாகவும் ஓட்டளித்திருக்கிறார். மூன்றில் இருபங்கு ஜூரர் உம்மைக் குற்றவாளியாகக் கூறியுள்ளார். ஆதலால் நான் உனக்குத் தண்டனை விதிக்கிறேன் ! குற்றம் சாட்டியோர் என்ன தண்டனை தரலாம் என்று ஆலோசனை கூறலாம் !

(மன்றத்தில் ஒரே கைதட்டல் ! ஆரவாரம் எழுகிறது.)

மெலிடஸ்: (சட்டென எழுந்து) எங்கள் ஆலோசனை சாக்ரடிசுக்கு மரண தண்டனை !

லைகான்: ஆம் நீதிபதி அவர்களே ! மரண தண்டனைதான் ஏற்றது !

ஆனிடஸ்: சாக்ரடிஸ் குற்றங்களுக்குத் தண்டனை மரணமே !

நீதிபதி டிரிப்தோலிமஸ்: அதற்கு நீவீர் கூறும் காரணங்கள் என்ன ?

மெலிடஸ்: அதற்கு நாங்கள் கூற வேண்டுமா ?

நீதிபதி டிரிப்தோலிமஸ்: காரணமின்றி ஒருவனைக் கொல்ல நீவீர் விரும்புகிறீரா ? அதற்குப் பதிலாக அவரை நாடு கடத்தலாம் அல்லவா ?

ஆனிடஸ்: ஏதென்ஸ் மாந்தர் நன்மைக்கு மரணம் ஒன்றுதான் இந்த மனிதனை ஒழிக்க முடியும். தீர்த்துக் கட்டுங்கள் சாக்ரடிஸை ! இனிமேல் இந்தக் கீழ்நிலை எமக்கு நேராது ! எமது செவிகளில் இனிமேல் அவரது வரட்டு உபதேசம் ஒலிக்காது ! நாடு கடத்தப் பட்டவன் மீண்டும் நாட்டுக்குள் நுழையலாம். ஆனால் செத்தவன் மீள மாட்டான் !

நீதிபதி ஃபிலிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாடியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக் கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

***************************

“புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு ! நாம் அவரவர் பாதைகளில் போகிறோம், நான் சாவதற்கு, நீவீர் வாழ்வதற்கு ! கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

“நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”

“எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ·பிளிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாட்டியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தண்டனைத் தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் சட்ட விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

சாக்ரடிஸ்: எனக்கு நானே தண்டனை இட்டுக் கொள்ள என்ன இருக்கிறது ? எந்தக் குற்றமும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. நீவீர் சாட்டிய எந்தக் குற்றதையும் நான் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இங்கு ஜூரர்களில் பெரும்பான்மையோர் என்ன முடிவு செய்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி சைரஸ்: சாக்ரடிஸ் ! உமக்கு விழுந்த ஓட்டுக்களின் எண்ணிக்கை பற்றி உளவிக் கருத்தாட எமக்கு அங்கீகாரம் உள்ளது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீயே சொல் உன் குற்றத்துக்கு உகந்த தண்டனையை !

சாக்ரடிஸ்: அப்படியானால் சொல்கிறேன். நான் இதுவரைச் செய்தவை என்ன என்று முதலில் பார்க்கலாம். குணம் நாடிக் குற்றமும் நாடித் தீர்ப்பு அளிப்பீர் ! நான் நாட்டு விடுதலைக்குப் பகைவரை எதிர்த்துப் போராடினேன் ! உமது வாழ்வுக்கு நீங்கள்தான் பொறுப்பாளிகள் என்று மனிதக் கடமையைச் சுட்டிக் காட்டினேன். தேசத்தின் செல்வாக்குக்கும் சீரழிவுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நீண்ட காலமாய்ச் சொல்லி வருகிறேன். நான் வறுமையில் உழன்றாலும் உம்மை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறேன். நானிப்படிச் சமூகத்தின் நலனுக்காக மெய்வருந்தக் கூடாது என்று என் மனைவி தினமும் என் கன்னத்தில் இடிக்கிறாள். இவற்றை எல்லாம் தீர்ப்புக்கு எடுத்துக் கொண்டால், தண்டனையாக என்னை ஏதென்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தலாம். நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்தினால் என் வயதான மனைவிக்கு ஆயுள் பூராவும் ஓய்வு ஊதியம் (பென்சன்) அளிக்கும்படி வேண்டுகிறேன். அல்லது நீங்கள் எனக்குப் பண அபராதம் விதிக்கலாம். நான் செல்வந்தனாக இல்லாததால் பெரிய தொகை தர இயலாது. என்னால் சிறிதளவுத் தொகை தர முடியும். என் ஆலோசனை ஒரு மினா (Mina means Ancient Greek Money about 5 dollar) அபராதம் ! அது மிகச் சிறு தொகை என்று எனக்குத் தெரியும். அதுதான் உமக்குக் கிடைக்கும் ! அதுதான் என்னிடம் இருப்பது ! நாடு கடத்தலா இல்லை பண அபராதமா ? நீதிபதி அவர்களே ! அது உங்கள் முடிவு !

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! உமக்குத் தெரிகிறதா ? உமது ஆலோசனைத் தண்டனைக்கும் வழக்கிட்டோர் விதித்துள்ள தண்டனைக்கும் இடைப்பட்ட ஒரு முடிவை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது எங்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. சட்டம் வேறெதைத் தேர்ந்திடவும் வழி காட்டவில்லை. ஆனால் உமது ஆலோசனைத் தண்டனை வேடிக்கையாக உள்ளது, மூன்று பெரும் தேசத் துரோகங்களுக்கு ஒரு மினா அபராதமா ? எங்களுக்குக் கெட்ட பெயர் கிடைக்க வழி செய்கிறீர். நாடு கடத்தினால் மீண்டும் ஏதென்ஸ் நாட்டுக்குள் புகுவாய் என்னும் புகார் எழுந்துள்ளது.

சாக்ரடிஸ்: அபராதத் தண்டனைக்கு ஓர் ஏழை எளியன் தன் உடைமை அனைத்தையும் சமர்ப்பிப்பான் என்பது உங்கள் நினைப்பா ? நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஓப்புக் கொள்ளாத குற்றங்களுக்கு எப்படி நீங்கள் தண்டனை இடலாம் நீதிபதி அவர்களே ? ஒன்றும் இல்லாதவன் என்று நினைத்துத்தானே என்னை நீங்கள் அவமானப் படுத்துகிறீர் ! என்னுடைய அபராத தண்டனை ஆலோசனையை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

(லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

The Final Verdict to Socrates

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! ஆம் மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

(லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

சாக்ரடிஸ்: (எல்லோரையும் சுற்றி நோக்கி கைநீட்டி) உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் மரண தண்டனையை எதிர்பார்த்தேன் என்று. மன்றத்தின் வழக்கு விசாரணை எனக்கு மரண தண்டனை விதிப்பதில் வென்று விட்டது ! முதலில் என் நற்குண நண்பருக்கு நன்றி கூற வேண்டும். என்னை விடுவிக்க ஓட்டளித்தமைக்கு ! என்னைக் காப்பாற்றி விடலாம் என்று கனவு கண்டதற்கு ! என்னைத் தப்புவிக்க அனுதினம் ஆர்வமோடு இருந்ததற்கு ! ஆனால் நாமொன்று நினைக்க விதி ஒன்றைச் செய்யும் ! மரண தேவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான். மரண தேவனுக்கு அழைப்பு விடுத்த பிறகு யாரும் அவனை நிறுத்த இயலாது ! நேர்மை நெறிக்கு மதிப்புக் குறைவு ! உண்மை காலெடுத்து வெளியே எட்டு வைப்பதற்குள் பொய்மை ஊரை மூன்று முறை சுற்றி விடுகிறது ! மரணம் முழங்கை தூரத்தில் இருக்கும் எனது நண்பன் ! முடிவில் எல்லாம் மரணத்தில்தான் சங்கமம் அடையும் ! தப்பிக் கொள்ள நான் ஓடிப் போய் விடலாம் ! எங்கே ஓடுவது ? எந்த நாட்டுக்குள் ஒளிந்து கொள்வது ? எந்த நகரில் பாதுகாப்புக் கிடைக்கும் ? மரணப் பாதையில் யார் நம்முடன் கூட வருவது ? மறைந்து கொள்ளத் தூண்டுவது மரண மில்லை, தீய எண்ணம். முதிய இந்த வயதில் மெதுவாய் நடக்கிறேன். நான் சாவதற்கு முன் எனக்குத் தண்டிப்பு மரணமா ? மரணம் இப்போது என்னைக் கைவிடாது ! வயதாயினும் மரணம் என்னை விடாது. இளைஞாயினும் மரணத்திலிருந்து தப்ப முடியாது. பழி சுமத்தியோர் பரவசம் அடைய எனக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. செத்தவன் கடன் அடைக்க மாட்டான் ! வாழ்வது மரணம் அடைவதற்கு ! பிறப்பதின் விதி முறை முடிவில் இறப்பது ! அப்படி எண்ணினால் மரணம் ஒன்றுமில்லை ! கனவற்ற உறக்கம் மரணம் ! உறங்குவது போல்வது இறப்பு ! உறங்கி விழிப்பது போல்வது பிறப்பு ! ஒரு நாணயத்தின் ஒரு முகம் பிறப்பு ! மறு முகம் இறப்பு ! இறப்பதற்கு அஞ்ச வில்லை நான் ! பிறந்ததற்கு வருந்த வில்லை நான். நித்திய உறக்கம் இறப்பு ! உதய சூரியன் எழுப்பாத உறக்கம். சுடுகாட்டுப் பீடத்தில் அமர்ந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கையில் வைத்துக் கொண்டு என்மீது வழக்காடல் செய்தார். ஞான மேதைகள் நீதிபதிகளாய் இருந்தால் என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கிடைத்திருக்கும். மன்றத்தில் என் மனத்தைக் காயப் படுத்தினார் ! என் சிந்தனகளைக் கேலி செய்தார். கால தேவன் எனக்குக் கை விலங்கு போட்டிருக் கிறான். உமது வேலை முடிந்தது ! என் பணியும் முடிந்தது ! நீவீர் வாழச் செல்கிறீர் ! நான் சாகச் செல்கிறேன். கடவுள் ஒருவர்தான் அறிவார் எது நெறி, எது வெறி என்று. புனித தேவதை இறுதியில் என்னைப் பார்த்து உன் இனிய இச்சை என்ன வென்று கேட்டால், ‘மீண்டும் நானிந்த ஏதென்ஸ் நகரில் பிறக்க வேண்டும்,’ என்று நான் சொல்வேன் ! நீதிபதி அவர்களே ! உங்கள் ஏகோபித்த தீர்ப்புக்கு என் மறுப்பு எதுவும் இல்லை !

Hemlok Poison given to Socrates

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! மீண்டும் ஒருமுறைச் சொல்கிறேன் ! உன் தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை. நீ கெம்லாக் நஞ்சைக் குடிக்க வேண்டும் நாங்கள் குறிப்பிடும் நாளில் ! (காவலரை பார்த்து) அவரைச் சிறைக்குக் கொண்டு செல்வீர் ! நீதி மன்ற வழக்காடல் இத்துடன் முடிந்தது !

(காவலர் விலங்கிட்ட சாக்ரடிஸை அழைத்துச் செல்கிறார். நீதிபதி ·பிளிப் மனக் குழப்பம் அடைந்து விரைவாக எழுந்து செல்கிறார்)

நீதிபதி சைரஸ்: (காவலன் ஒருவனைப் பார்த்து) யார் அரசாங்கக் கைதிகளை மேற்பார்வை செய்கிறார் என்று தெரிந்து என்னைக் காணும்படி உடனே அழைத்து வா. (மெதுவாக) யாரும் அறியக் கூடாது எந்தச் சிறையில் சாக்ரடிஸ் அடைபட்டுள்ளார் என்று ! யாரும் அவரைக் காணக் கூடாது ! யாரும் சாக்ரடிஸை மீட்க வந்தால் அவரை உடனே கொன்று விட வேண்டும் ! அவரை நான் நாட்டு துரோகிகள் என்று பழி சுமத்துவேன் !

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சைரஸ் ! இந்த வெறியும், வெறுப்பும் நம்மை வெறியர் என்று காட்டும். இந்தக் கடும்போக்கு நமக்குத் தேவையில்லை. யாரும் சாக்ரடிஸைக் காப்பாற்றத் துணிய மாட்டார் ! அப்படி நடந்தாலும் தண்டித்த பிறகு சாக்ரடிஸ் தப்பிச் செல்ல உடன்பட மாட்டார் !

சைரஸ்: என்னருமை டிரிப்தோலிமஸ் ! தெரிந்துகொள், மிக நெருங்கிய ஓட்டு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தவர் சாக்ரடிஸ் ! அவரைக் காப்பாற்றப் பல நண்பர் காத்திருக்கிறார். நாம் தாமதம் செய்யக் கூடாது ! நாள் கடத்தாமல் நாளைப் பொழுதிலே தண்டிப்பு நாளைக் குறித்திடுவோம் ! நமது முதல் வேலை அதுதான் நாளைக் காலையில் !

(சைரஸ் எழுந்து வெளியேறுகிறார். டிரிப்தோலிமஸ் தலையில் கை வைத்துச் சிந்தனையில் ஆழ்கின்றார். பொது மக்களும், ஜூரர்களும் கலைந்து மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்)

***************************

“புன்னகை புரி மெக்கில்லஸ் ! சூரியன் மீண்டும் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !”

சாக்ரடிஸ்

“ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம் போன்ற துறைகளைத் தேடும் மற்றோர் ஆத்மாவோடு ஈடுபட வேண்டும். யாராவது கூற முடியுமா புரிதலும், அறிதலும் மேவிய ஆத்மாவை விடத் தெய்வீகம் பெற்றது ஒன்று உள்ளதா என்று ? அப்போது அந்த முறையே எல்லாவற்றையும் புரிந்து, அறிந்து கொண்ட தெய்வீக உணர்வு பெற்றுத் தன்னையும் உணர்ந்திடும் பண்பாடைப் பெறுகிறது.”

“ஞானமும், திறமையும் கொண்டுள்ள ஒருவரை நாம் உடனே தெரிந்து கொள்கிறோம். அவை அவருடைய உடல் தோற்றத்தையோ, செல்வத்தையோ, அதிகார ஆற்றலையோ சார்ந்தவை அல்ல.”

சாக்ரடிஸ்

******************************

அங்கம் -4

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான்.

மெக்கில்லஸ்: (சாக்ரடிஸை மெதுவாகத் தட்டி) சாக்ரடிஸ் ! சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: (கண் விழித்தும் கண் மூடியும் எழுந்து) ஓ மெக்கில்லஸ் ! விடிந்து விட்டதா ?

மெக்கில்லஸ்: வணக்கம் சாக்ரடிஸ் ! இன்னும் பொழுது விடிய வில்லை ! கீழ்வானம் மட்டும் சிவந்துள்ளது ! சிவந்த கண்ணுடன் கதிரவனின் கதிர்கள் அக்ரபோலிஸ் மலைச் சிகரத்தை எட்டி விட்டன ! பொழுது புலர்வதற்கு முன்னே நீங்கள்தான் என்னை எழுப்பச் சொன்னீர்.

சாக்ரடிஸ்: (எழுந்து உட்கார்ந்து) நன்றி மெக்கில்லஸ் ! நல்ல தூக்கம் எனக்கு ! நன்றாகத் தூங்கி விட்டேன் ! மீளாத உறக்கத்துக்கும் முன் மேலான தூக்கம் ! சுகப் பொழுதாய் விடியப் போகிறது.

மெக்கில்லஸ்: (மனம் வருந்தி) என்ன சுகப் பொழுதா ? எப்படி நிம்மதியாகத் தூங்க முடிந்தது ? எனக்குத் தூக்கம் வரவில்லை சாக்ரடிஸ் ! இன்று இறுதிக் காலை அல்லவா ? (சங்கிலியைக் கழற்றி) நான் இப்போது சங்கிலியை நீக்குகிறேன். சட்டப்படிக் கடைசி நேரத்தில் கட்டிய சங்கிலியை நீக்கலாம் என்று விதி உள்ளது !

Socrates in Prison

சாக்ரடிஸ்: புன்னகை புரி மெக்கில்லஸ் ! மீண்டும் சூரியன் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உமது விடுதலை பறிபோனதற்கு நான்தான் பழிக்கப்பட வேண்டியவன்.

சாக்ரடிஸ்: ஒரு திசையில் பார்த்தால் அது சரியாகத் தோன்றுகிறது. ஆனால் வீணாய்க் கலங்காதே நீ ! யாருக்குக் கேடு நேர்ந்தாலும் பழிக்கு ஒருவர் மட்டும் காரணமாக இருக்காது ! நானும் அதற்கோர் காரண கர்த்தா ! நீதிபதிகள் என்னை மன்றத்தில் குற்றவாளியாக முத்திரை அடித்துள்ளார் !

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் அரசாங்க ஆணைக்கு அடி பணிந்து போகிறீர். நானோ சிறைக் கதவைப் பூட்டும் சாவியைக் கையில் வைத்திருப்பவன் ! மனித இனத்துக்கு விடுதலை வாழ்வுதான் முதல் மூச்சு ! முடிவான மூச்சு ! விடுதலை இல்லாத மனிதன் பாதி செத்தவன் !

சாக்ரடிஸ்: விடுதலை தேடுவது அடிமைகளின் வழிபாடு ! ஆனால் நான் அடிமை அல்லன் ! உரிமை பறிபோன அரை மனிதன் ! உயிர் போன பின் அரை வாழ்வும் பூஜியமாகிறது !

மெக்கில்லஸ்: அடிமை இனத்தார் பரம்பரையாய் முடங்கிக் கிடக்கும் நடைப் பிறவிகள் ! அடிமைத் தனத்தை விட்டு வெளியேறப் பலர் விருப்பம் அடையார் !

சாக்ரடிஸ்: நம்மைப் போல் அடிமைகளாய் இல்லாதவரும் ஏதாவது ஒரு விதிமுறைக்கு அடிமை யாகத்தான் வாழ்கிறார் !

மெக்கில்லஸ்: நாம் அடிமைகள் அல்லர் ! நாம் விடுதலை மனிதர் !

சாக்ரடிஸ்: நாம் விடுதலை மனிதரா ? உறக்கமற்ற ஒருநாள் இரவு ! உணவில்லாத ஒருநாள் பகல் ! உடல் மறைக்கும் ஆடையில்லாத வறுமை ! தங்குமிட மில்லாத தரித்திர நிலை ! அவை அனைத்தும் நம் அடிமை ஆத்மாவைச் சுட்டெரிக்கின்றன ! ஒரு சில நாட்களிலோ ஒரு சில மாதங்களிலோ ஒரு சில ஆண்டுகளிலோ நாம் மரித்து விடுவோம் ! நாமிந்த உடம்பில் முடங்கி உயிரோடு வாழும் வரை நாமெல்லாம் உடம்புக்கு அடிமையாக வாழ்கிறோம் ! வயிற்றுக்குப் பசி, வாயிக்குத் தாகம், உடலுக்கு உறவு – இப்படி உடல் இச்சைகள் நம்மை விலங்கிட்ட அடிமைகள் நாம் ! முற்றிலும் விடுதலை அடைவது முடிவில் மரணத்தில்தான் ! உயிர் வாழ்க்கையே மனிதருக்கு அடிமை வாழ்வுதான் ! மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர்ப் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !

மெக்கில்லஸ்: அது என் வேலை இல்லை சாக்ரடிஸ் ! நாட்டை விட்டே நான் ஓடி விடுவேன் கெம்லாக் நஞ்சைக் குடிக்க நேரிட்டால் ! (சிறிது தயங்கி) நடைச் சத்தம் கேட்கிறதா ? யாரோ வருகிறார் உம்மைக் கடத்திச் செல்ல !

சாக்ரடிஸ்: ஆமாம் யாரோ வரும் அரவம் கேட்கிறது ! அடுத்தோர் சிறைக் காவலனாக இருக்கலாம் !

(கையில் கத்தியுடன் மெக்கில்லஸ் கதவுக்குப் பின்புறம் ஒளிகிறான்.)

***************************

“மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர் வாழும் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் நாட்டை ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

மெக்கில்லஸ்: (கதவுக்குப் பின் மறைந்து கொண்டு) யாரும் என்னைத் தவிர சிறைச்சாலைக் காப்புக்கு ஏற்பாடு செய்யப் படவில்லை ! வருவது யார் ?

(கிரிடோ உள்ளே நுழைகிறான். உடனே மெக்கில்லஸ் பின்னால் பாய்ந்து சென்று கிரிடோவின் கழுத்தைப் பிடித்துக் கத்தியை நீட்டுகிறான்.)

கிரிடோ: (பதட்டமுடன்) சிறைக்காவலனே பொறு ! நான் பகைவன் அல்லன் !

சாக்ரடிஸ்: அடப் பாவி ! கிரிடோ நீயா ? எதற்கு நீ தனியாக வந்தாய் ? அரசாங்கப் பாதுகாப்புகளை எப்படி மீறி வந்தாய் ? நானிருக்கும் இடம் எனக்கே தெரிய வில்லை; உனக்கு எப்படித் தெரிந்தது ?

(மெக்கில்லஸ் கிரிடோவின் பிடியைத் தளர்த்திக் கத்தியை உறைக்குள் சொருகுகிறான்)

கிரிடோ: என் கழுத்தை அறுத்திருப்பாய் ! நீ என் முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்ததால் வந்த பயங்கரச் செயல் இது ! நான் யாரென்று நீ அறிவாயா ?

மெக்கில்லஸ்: நீ யாராய் இருந்தால் என்ன ? சிறைக்குள் புகுவோரைச் சிரச்சேதம் செய்யென்று எனக்கு உத்தரவு ! உன் தலை தப்பியது சாக்ரடிஸ் வரவேற்பால்தான் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! கிரிடோ என் பழைய தோழன். நானும் அவனும் பல தடவைக் குடித்து ஒன்றாய்த் திரிந்திருக்கிறோம். அவனை விட்டு விடு. அவன் அப்பாவி.

கிரிடோ: என்னைப் பாதுகாப்பதற்கு நன்றி சாக்ரடிஸ் ! உம்மைப் பாதுகாக்க இப்போது யாருமில்லை ! அதுதான் என் கவலை.

மெக்கில்லஸ்: உண்மையைச் சொல் ! உனக்கு எப்படித் தெரியும், சாக்ரடிஸ் இங்கு அடை பட்டிருப்பது ? எனக்குத் தெரிய வேண்டும் அது !

கிரிடோ: (கவலையற்று) இதெல்லாம் ரகசியம் ! எமக்குத் தெரியும் இந்த ரகசியச் சிறை !

மெக்கில்லஸ்: உமக்கு யார் சொன்னது ? எனக்குத் தெரியம் உமது ரகசியம் ! நான்தான் ஒரு ரகசியத் தகவலை உங்கள் வேலைக்காரன் ஒருவன் மூலம் அனுப்பினேன். அப்படித்தான் உமக்குத் தெரிந்தது ! அந்தத் தகவலை அனுப்பியன் நான்தான் !

கிரிடோ: (நன்றி ஆர்வமோடு) ஓ ! நீதான் அந்தத் தகவலை அனுப்பியவனா ? அது எனக்குத் தெரியாது.

மெக்கில்லஸ்: (குரலைத் தாழ்த்தி) மெதுவாகப் பேசு ! ரகசியம் வெளியே தெரிந்தால் என் வேலை போய்விடும் ! ஏன் என் தலையே தரையில் உருண்டோடும் !

கிரிடோ: (அன்புடன் நெருங்கி மெக்கில்லஸ் கையைக் குலுக்கி) நன்றி நண்பனே ! நாங்கள் இந்த நன்றியை மறக்க முடியாது ! கடைசி தினத்தில் சாக்ரடிஸை இப்படி நேராகக் கண்டது என் அதிர்ஷ்டமே !

மெக்கில்லஸ்: (மெதுவாக) கிரிடோ இது ரகசியமாய் இருக்கட்டும் ! மறந்துவிடு இச்சம்பவத்தை. என் பெயர் வெளியே தெரியக் கூடாது ! என் தோலை உரித்து விடுவார் !

கிரிடோ: (சாக்ரடிஸைப் பார்த்து) உமது மனைவி பிள்ளைகள் உம்மைப் பார்க்க வந்தாரா ?

சாக்ரடிஸ்: பார்க்க அனுமதி தந்தார். நான்தான் பார்க்க மறுத்தேன். நேராகப் பார்ப்பது எனக்கும் மன வேதனை, அவருக்கும் மன வேதனை ! ஆனால் உனக்கொரு தனி அனுமதி வாங்க மறந்து போனேன். நீயே நேராக இப்போது வந்து விட்டாய்.

கிரிடோ: எமது உடை வாட்கள்தான் எங்களுக்கு அனுமதி தர வல்லது. ஆறு பேர் இப்போது உருவிய வாளுடன் வெளியே ஒளிந்து கொண்டு நிற்கிறார். நான்தான் முதலில் இங்கு தலையை நீட்டியவன் !

சாக்ரடிஸ்: எப்படிக் காவலர் கண்காணிப்பைக் கடந்து வர முடிந்தது ?

மெக்கில்லஸ்: நான்தான் சொன்னேனே, என்னைத் தவிர வேறு யாரும் நியமிக்கப் பட வில்லை. யாரும் சாக்ரடிஸைப் பார்க்க வரக் கூடாது என்பது எனக்கிட்ட விதி ! அப்படி வந்தால் அவரைக் கொன்று விடும்படி எனக்கு உத்தரவு !

கிரிடோ: எங்களைக் காவலர் தேடிக் கொண்டிருக்கிறார். நாங்களும் காவலர் கண்ணில் படாது ரகசியச் சிறைக்கு அருகே வந்து விட்டோம். எங்களை ஆபத்து விரட்டிக் கொண்டு வருகிறது. எந்த நிமிடத்திலும் நாங்கள் சிக்கிக் கொள்ளலாம் !

சாக்ரடிஸ்: அப்படியானால் ஓடிப்போ கிரிடோ ! என்னால் உன்னுயிருக்கு ஒன்றும் நேரக் கூடாது ! உங்கள் ஆட்களுக்கும் ஆபத்து நேரக் கூடாது. போ கிரிடோ போ ! சீக்கிரம் போய்விடு !

கிரிடோ: கவலைப் பாடாதீர் சாக்ரடிஸ் ! (மெதுவாக) வெளியே வாகனங்கள் தயாராக உள்ளன. பிரைவ்ஸ் (Piraievs) துறைமுகத்தில் ஒரு கப்பலே தயாராக நிறுத்தப் பட்டுள்ளது. நாங்கள் உம்மைக் கடத்திச் செல்ல வந்திருக்கிறோம். உம்மைத் தனியே விட்டுச் செல்லப் போவதில்லை.

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! இதுதான் என் திட்டமும். ஆனால் நான் நேராக அவ்விதம் என் தகவலில் எழுத வில்லை ! ஒருவேளை என் தகவல் அரசாங்கக் காவலர் கையில் கிடைத்தால் கடத்திச் செல்லும் திட்டம் கைகூடாமல் போகும்.

சாக்ரடிஸ்: ஆனால் கிரிடோ ! இங்கு எனக்கு எந்தக் குறையும் இல்லை. நன்றி கூறுவேன் தோழர் மெக்கில்லஸ் காவலருக்கு ! அரசாங்கக் கைதி மரியாதை அல்லவா எனக்குக் கிடைத்துள்ளது.

என்னைக் காப்பாற்ற நீ முயல வேண்டாம்.

மெக்கில்லஸ்: (சினத்துடன்) அப்படிப் பேச வேண்டாம் சாக்ரடிஸ் ! கெம்லாக் நஞ்சை நீங்கள் குடிப்பதை நான் தாங்கிக் கொள்ள முடியாது. என் கண்முன் நீங்கள் மரிப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது ! ஓடி விடுங்கள் கிரிடோவுடன் ! நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! எனக்கு வியப்பாக உள்ளது ! நீ இப்படி அரசாங்கத்தை ஏமாற்றுவாய் என்று நீதிபதிகள் அறிய மாட்டார். காவல் அதிகாரியே என்னைக் கடத்திச் செல்ல விடுவதா ?

மெக்கில்லஸ்: கிரிடோ ! இந்தச் சதி வேலையைச் செய்வதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். முதலில் என்னை அடித்துக் காயப்படுத்த வேண்டும் ! நான் சண்டையில் காயப்பட்டு மயக்கம் அடைந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்படியானால் எனக்குச் சிரச்சேதம் கிடைக்காது. என் வேலையும் பறி போகாது. சாக்ரடிசும் தப்பிக் கொள்வார். நானும் தப்பிக் கொள்வேன்.

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ கொஞ்ச நேரம் வெளியே நிற்பாயா ! நானும் கிரிடோவும் தனியாக இதைப் பற்றிப் பேச வேண்டும்.

கிரிடோ: இல்லை நாம் பிறகு பேசிக் கொள்வோம். இப்போது விவாதிக்க நேரமில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் விடிந்து விடும். இருள் முடிவதற்கு முன்னே நம் கடத்தல் வேலை முடிய வேண்டும் !

மெக்கிலஸ்: சரி நான் வாசலில் நிற்கிறேன். நீங்கள் தனியாகப் பேசுங்கள்.

(மெக்கில்லஸ் வெளியே சென்று மறைவில் நிற்கிறான்)

***************************

Last Days of Socrates

“ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

கிரிடோ: (ஆத்திரமாக) சாக்ரடிஸ் ! நாமிப்போது வெளியேற வேண்டும். இன்னும் அரை மணி நேரத்தில் நகர மக்கள் விழித்துக் கொள்வார். வழியில் போகும் போது செய்வது சரியா தப்பா வென்று தர்க்கம் இடலாம். இப்போது கிளம்பினால் வழிக் காவலர் கண்களிலிருந்து நாம் தப்பி விடலாம் ! கப்பல் தயாராக நிற்கிறது. வெளியேறாமல் நாமிரும் பிடிபட்டால் நமது தலைகள் வாளால் சீவப்படும் !

சாக்ரடிஸ்: (படுக்கையிலிருந்து எழாமல்) உயிருக்குப் பயந்து நான் ஓட வேண்டுமா ? ஊருக்குப் பயந்து எங்கே ஓடுவது ? எங்கே போய் வசிப்பது ? மனைவியும் பிள்ளைகளும் தனியே இங்கு அனாதைகளாகத் தவிக்கும் போது நான் அவரை விட்டுவிட்டு அன்னிய நகரில் அகதியாக வாழ்வதா ? முயலை விரட்டும் ஓநாய்கள் ஒருபோதும் ஓயா ! தினம் தினம் சாவதை விட ஒரே சமயத்தில் மரிப்பது நிம்மதி அளிப்பது.

கிரிடோ: நீங்கள் பிழைத்துக் கொள்ளக் கடவுள் ஒரு சந்தர்ப்பம் தருகிறார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உயிரோடிருந்தால் ஏதென்ஸ் வாலிபருக்கு நீங்கள் இன்னும் நெடுங்காலம் உபதேசம் செய்யலாம் !

சாக்ரடிஸ்: ஏதென்ஸில் நானினி வாழ முடியாது. நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது கிரிடோ ! ஏதென்ஸ் நகரில் வாலிபரோடு நான் கருத்தாடல் புரியும் காலம் கழிந்து விட்டது. நீதி மன்றத்தில் கடவுள் என் ஆயுட் கால முடிவை எழுதி விட்டார் ! அதை நான் அழிக்க இயலாது ! ஐம்பது ஆண்டுகளாக நீடித்த என் உபதேச வாழ்க்கை ஓடிப் போனது. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் நான் உயிரோடு இருக்கலாம். நான் இன்று மாண்டாலும் சரி அல்லது நாளை மரித்தாலும் சரி என்ன மாறுபாடு உண்டாகப் போகுது !

கிரிடோ: நீங்கள் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் !

சாக்ரடிஸ்: நான் நஞ்சு குடித்துச் சாக வேண்டும் என்று விதி உள்ளது ! நான் அவ்விதம் சாவதே எனக்குப் பெருமை தர வல்லது. அஞ்சி ஓடினால் நான் நேர்மையற்றவன் என்பது உறுதியாகும். நேர்மை இல்லாதாவன் என்று ஓடி ஒளிவதை விடைச் சீர்மை உள்ளவன் என்று நஞ்சுண்டு செத்து மடிவதே மேல் !

கிரிடோ: இது தற்கொலை சாக்ரெடிஸ் ! இதைத் தியாகம் என்று நினைக்காதீர் ! நீங்கள் தியாகியாக வரலாற்றில் பேரெடுக்க விழைகிறீரா ?

சாக்ரடிஸ்: தியாகள் தமது கொள்கைக்காக வேதனைகளைச் சகித்துக் கொள்வார். என் கொள்கைகள் எனக்குத் தொல்லைகள் தருவதில்லை ! நான் எந்த சொந்தக் கொள்கையையும் பரப்ப வில்லை ! அவற்றை நிலைநாட்ட நான் எனது உயிரைக் கொடுக்க வில்லை. கெம்லாக் நஞ்சு எனக்கு வேதனை தராது ! நான் மரித்த பிறகு எனது கொள்கை எதையும் நீவீர் பரப்ப நான் எதிர்பார்க்க வில்லை !

கிரிடோ: என்ன பேச்சு இது சாக்ரடிஸ் ? எனக்குப் புரிய வில்லை !

சாக்ரடிஸ்: நான் வாழ்ந்தாலும் சரி அல்லது செத்தாலும் சரி என் கொள்கையை மாற்ற நான் விரும்பவில்லை. சத்தியத்தைத் தேடும் ஒருவனுக்குத் தன்னுயிர் ஒன்றும் பெரிதில்லை.

கிரிடோ: என்ன மாதிரி சத்தியம் உமது உயிருக்கு ஒரு மதிப்பும் தருவதில்லை ?

சாக்ரடிஸ்: நான் என் உயிருக்கு மதிப்பு அளிக்க வில்லை. ஆனால் நேர்மை நெறி வாழ்வை மிகவும் மதிக்கிறேன். எனது இறுதிப் போராட்டமான மரணம் என்னை எதிர்நோக்கி வரும் போது என் வாழ்க்கை சிறப்பாக இல்லாவிடில் நான் என் வழிமுறையை மாற்ற முனைவேன்.

கிரிடோ: வாழ்க்கையில் எதிர்த்துப் போராடாது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்புவது கோழைகளின் பலவீனம் அல்லவா ?

சாக்ரடிஸ்: உயிருக்குப் பயந்தவன் கோழை ! பணிவு இல்லாதவன் பலவீனன் ! உனக்குத் தெரியும் ஒரு சில மணிகளில் சாகப் போகும் மனிதனின் மனோ நிலை ! சாவதற்கு எனக்கு வல்லமை உள்ளது. தப்பிச் செல்ல எனது மனம் பலவீனப் படுகிறது. உயிரை விட அச்சம் கொண்டவன் நானில்லை. எனக்குரியது என் உடம்பு ஒன்றுதான். உயிரெனக்குச் சொந்தம் இல்லை ! உயிர் எங்கிருந்து வந்ததோ அங்கு போவதை நான் எப்படித் தடுக்க முடியும் ?

கிரிடோ: (மன வேதனையுடன்) சாக்ரடிஸ் ! உமது பாதை புதைகுழி நோக்கி உம்மை இழுத்துச் செல்கிறது ! கடவுள் அளித்த பொன்னுயிரை மடையர் கையில் கொடுத்துவிடத் துடிக்கிறீர். என்னால் பொறுக்க முடியவில்லை அன்பரே ! எப்படி நான் உம்மை இந்த சிறையில் சாகும்படி விட்டுவிட்டுச் செல்வேன் ? தப்பிக் கொள்ள வழி உள்ளது சாக்ரடிஸ் ! வாருங்கள் போகலாம் (கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறான்)

***************************

“எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

சாக்ரடிஸ்: எல்லாப் பாதைகளும் மரணத்தை நோக்கித்தான் செல்கின்றன கிரிடோ ! அதுதான் நீதியிலிருந்தும் நாட்டு நியதியிலிருந்தும் என்னை விடுவிக்க ஒரு காரணமா ?

கிரிடோ: இந்தக் கேடு கெட்ட விதிகளுக்கு நீங்கள்தான் பெரு மதிப்பு அளிக்கிறீர்.

சாக்ரடிஸ்: என்னைக் கொல்லப் போவதாக இருந்தாலும் நான் விதிகளை மீற மாட்டேன். நாட்டில் சட்ட திட்ட விதிகளை எழுதி வைத்திருப்பது ஒரு புனித ஏற்பாடு ! நாம் அந்த விதி முறைகளைப் போற்ற வேண்டும். எழுதிய சட்ட திட்டங்கள் கேடு கெட்டவை என்றால் அவற்றை அறிஞர் மாற்ற வேண்டும். அதனால் நாட்டு விதிகள் மீதுள்ள நமது மதிப்புக் குறையக் கூடாது.

கிரிடோ: இப்போது கால தாமதம் ஆகிவிட்டது. விதியைச் சீர்திருத்த முன்வருவார் யாருமில்லை ! விதியைத் திருத்த வேண்டும் என்றால் முதியவர் எல்லாம் கோபப்படுகிறார் ! விதிகள் மாறுவதில்லை !

சாக்ரடிஸ்: என் ஆயுட் காலம் குறுகிக் கொண்டு வருகிறது. இப்போது நான் விதிகளை ஒதுக்கினால் விதிகள் என்னைப் பார்த்துக் கேட்கும் : “ஏன் நீ பாசாங்கு செய்கிறாய் எம்மை மதிப்பதாக ? எம்மால் பலா பலன்கள் இருக்கும் போது ஏன் எம்மைத் தள்ளுகிறீர் ? நீவீர் நீதி தவறி நாட்டு விதியை நிராகரிக்கலாமா ?” என்று.

கிரிடோ: ஒருவர் சாகப் போகும் தருவாயில் சட்டங்களை மதித்தால் என்ன ? இல்லை மிதித்தால் என்ன ?

சாக்ரடிஸ்: சாகும் போது கூடச் சட்ட விதிகளை மதிக்காது மீறினால் மக்கள் என்னைத்தான் தூற்றுவார். சட்டத்தால் நான் சாகும் போது அவற்றை மதிப்பதால், என் மீது மக்களுக்கு உண்டாகும் மதிப்பு இரட்டிப்பாகிறது.

கிரிடோ: எங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்கள் உயிரைக் காக்க நாங்கள் ஒளிந்து வந்திருக்கிறோம். அதுபோல் சிறைக் காவலர் மெக்கில்லஸ் உயிர் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்களைக் காப்பாற்றவும் துணிந்து விட்டார். இப்போது உங்கள் உயிர் போவ தோடு எங்கள் உயிருக்கும் ஆபத்து வரப் போகிறது. அதுதான் எங்கள் பணிக்குக் கிடைக்கும் வெகுமதி !

சாக்ரடிஸ்: இத்தனை உயிர்கள் ஆபத்தில் சிக்கி என்னுயிர் பாதுகாக்கப் பட வேண்டுமா ?

கிரிடோ: எதுவுமே உம்முயிரை மீட்க உமது மனதை மாற்றாதா ? எங்களைத் துடிக்க வைப்பது உங்களை ஓர் அசைவும் செய்வதில்லையே !

சாக்ரடிஸ்: கிரிடோ ! உன் ஆர்வமும், துணிச்சலும் என்னை திகைக்கச் செய்கின்றன ! ஆனால் தனி மனிதன் வாழ்வு, குடும்பம், சொத்து சுகம் எல்லாம் நாட்டுக்குப் பிறகுதான் எனக்கு !

கிரிடோ: நீவீர் தியாகம் செய்ய நினைக்கிறீர். நீவீர் சட்டத்துக்கு ஓர் அடிமைப் பிறவி !

சாக்ரடிஸ்: உன்னோடு நான் ஓடிப் போனால், என் குற்றம் இரட்டிப்பாகிறது ! சட்டத்தின் கண்களைக் குத்தினால் குற்றத்தைக் குற்றத்தால் தாக்குவதாகிறது ! என் உள்ளத்தின் உட்குரல் எனக்குச் சொல்வதைத்தான் நான் கேட்பேன். இப்போது உன்னோடு ஓடிப் போவது தவறு என்று அது எனக்குச் சொல்கிறது.

கிரிடோ: எனக்கு இதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை. நான் போகிறேன் சாக்ரடிஸ் ! (கிரிடோ வெளியே சென்று மெதுவாய்க் கூப்பிடுகிறான்) ·பையிதோ (Phaedo) ! ஆகாத்தான் (Agathon) ! அல்சிபியாடஸ் (Alicibiades) ! நீங்கள் வந்து சாக்ரடிசிடம் பேசுங்கள். என்னால் அவர் மனதை மாற்ற முடியவில்லை !

சாக்ரடிஸ்: நான் மெக்கில்லஸைக் கூப்பிடுகிறேன் ! கிரிடோ ! இதற்கு மேல் நானும் சொல்ல எதுவுமில்லை ! (திரும்பி) மெக்கில்லஸ் ! நீ உள்ளே வரலாம்.

(மெக்கில்லஸ் மீண்டும் நுழைகிறான்)

மெக்கில்லஸ்: என்ன முடிவு செய்தீர் சாக்ரடிஸ் ! தப்பி ஓடப் போகிறீரா ? பயணம் எப்போது துவங்கும் ?

சாக்ரடிஸ்: ஹெம்லாக் தேனைக் குடித்ததும் என் புதிய பயணம் துவங்கும் மெக்கில்லஸ் ! உன்னைப் போன்ற உத்தம சீலன் கரங்கள் ஈந்து நானதைக் குடிப்பதில் ஆனந்தம் அடைகிறேன். நாட்டுத் துரோகிகள் எனக்கு நஞ்சு ஊட்டுவதை நான் வெறுக்கிறேன்.

மெக்கில்லஸ்: (மன வேதனையோடு) என்ன ? நீங்கள் தப்பி ஓட வில்லையா ? என் கையால் ஓர் உலக ஞானிக்கு நஞ்சைக் கொடுப்பதா ? படு பாதகச் செயல் அது சாக்ரடிஸ் ! என்னால் அந்தக் கொலை ஒருபோதும் நேராது !

சாக்ரடிஸ்: எப்போதும் நான் தப்ப முடியாது என்பதால் நான் ஓடிப் போக முயலவில்லை !

மெக்கில்லஸ்: அப்படியானால் சரி நான் என் வேலையைச் செய்கிறேன்.

(வெளியே போகும் போது அவன் கிரிடோ, ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபயாடஸ் நால்வரையும் சந்திக்கிறான். நால்வரும் சிறைக் கொட்டத்தில் நுழைகிறார்)

சாக்ரடிஸ்: (மகிழ்ச்சியோடு) உங்கள் யாவரிடமும் கடைசி நேரத்தில் விடை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனக்கு !

ஆகாத்தான்: என்ன ? உமக்குக் கடைசி நேரம் என்றா சொல்கிறீர் ?

சாக்ரடிஸ்: எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.

***************************

Hemloc is given to Socrates

“நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் தினம் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்குகிறார். மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

மெக்கில்லஸ்: (கண்ணீர் வடித்து வேதனையோடு): ஏதென்ஸ் ஞானிக்கு நான் நஞ்சைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கிட்ட உத்தரவு ! நான் அதைச் செய்ய நடுங்குகிறேன் ! கடவுளே ! நான் அந்தக் கொடுமைச் செய்ய வேண்டுமா ? அந்தப் பாபத்திலிருந்து விடுபட சாக்ரடிஸ் ஓடிப் போக வாய்ப்பு அளித்தாலும் அவர் தப்பிச் செல்ல மறுத்து விட்டாரே ! என் கடமையிலிருந்து நான் தப்ப நினைத்தேன் ! சாக்ரடிசுக்கு நான் நஞ்சைக் கொடுத்தேன் என்று ஏதென்ஸ் சரித்திரம் என்னை நெடுங்காலம் தூற்றும் ! என் மீது சாபம் போடும் ! நான் என்ன செய்வது ? சாக்ரடிஸ் தப்பி ஓடிப் போகமாட்டார் ! நான்தான் இந்தக் கடமையை நிறைவேற்றாது இப்போது ஓடிப் போக வேண்டும் ! என்ன செய்வது சாக்ரடிஸ் நீங்களே சொல்லுங்கள் ?

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ சிறைக் காவலன் ! நான் சிறைக் கைதி ! தண்டிக்கப் பட்ட ஒரு கைதி ! தப்பிச் சென்றாலும் நான் விடுதலை அடைய முடியாத ஓர் அரசாங்கக் கைதி ! பலி ஆடு எப்படி வாள் வைத்திருப்பவனுக்கு ஆணையிட முடியும் ! ஏதென்ஸ் நீதி மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது உன் கடமை ! பலி ஆடு தன் தலையை நீட்டுவது அதன் கடமை !

அல்ஸிபயாடஸ்: போதும் உங்கள் தர்க்கம். தப்பிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !

பயிதோ: ஆம் ! விடிவதற்குள் ஓடிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !
ஆகாத்தான்: குதிரையும் வாகனமும் தயாராகக் காத்திருக்கின்றன சாக்ரடிஸ் !

கிரிடோ: கடவுளே நீங்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பம் தருகிறார் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: கிரிடோ ! நான் ஒரு குற்றவாளி ! ஆனால் கள்ளம், கபடு, சூது கொலை ஏதும் செய்யாதவன் ! நான் தப்பிச் செல்லக் கடவுள் வழி செய்கிறார் என்று தவறாக விளக்கம் தராதே ! நான் ஒரு கயவன் அல்லன் ஓடிப் போக ! நீதி நெறிகளுக்குத் தலை வணங்குபவன் ! நான் நண்பரிடம் விடை பெறத்தான் கடவுள் உம்மை எல்லாம் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் ! நான் போகிறேன் என்னினிய நண்பர்களே ! கண்ணீர் சிந்தாமல் விடை கொடுங்கள் எனக்கு !

மெக்கில்லஸ்: (கண்ணீருடன்) நான் என் கடமையை முடிக்கா விட்டால் என் தலை சீவப்படும் ! நானொரு கொலைகாரன். தெரிந்தே செய்கிறேன் ஒரு கொலையை ! என்னை மன்னித்து விடுவீரா சாக்ரடிஸ் ! நான் போகிறேன் ஐயா, ஹெம்லாக் கொண்டுவர !

(மெக்கில்லஸ் உள்ளே போகிறான்.)

சாக்ரடிஸ்: கொண்டு வா அந்த நஞ்சு மருந்தை மெக்கில்லஸ் ! என்னால் உன் தலை உருளக் கூடாது ! நிம்மதியான தூக்கத்திற்கு நிரந்தர மருந்து ஹெம்லாக் ! கொண்டு வா மெக்கில்லஸ் ! கொண்டு வந்து என் அருகில் வை !

(மெக்கில்லஸ் கையில் ஒரு கிண்ணத்தையும் குவளையையும் கொண்டு வருகிறான்)

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! தயவு செய்து இந்த நஞ்சின் கோரத்தைப் பற்றி எதுவும் அதிகமாகப் பேசாதீர் ! எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சாக்ரடிஸ்: அதிகம் பேசத்தானே நான் ஏதென்ஸில் பிறந்திருக்கிறேன்.

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உணர்ச்சி வசப்பட்டால் அது ஹெம்லாக் மருந்துக்கு இடையூறு செய்யும் ! அப்புறம் இரண்டாவது கிண்ணம் நீவீர் அருந்த வேண்டி வரும்.

சாக்ரடிஸ்: அப்படியானால் நான் பத்துத் தடவை குடிக்க வேண்டி வரும் நிச்சயமாய் நான் மடிவதற்கு !

பயிதோ: நான் ஒன்று கேட்க வேண்டும் சொல்வீரா சாக்ரடிஸ் ? உண்மையாகச் சொல்வீர்.
துணிந்து உயிரைப் போக்கிக் கொள்வது எளிதாக இருக்குமா ? நெஞ்சுறுதியோடு மரணத்துடன் போராடுவது இலகுவானதா ? மரணம் அடைவதில் உமக்கு இச்சை உள்ளதா ? அச்சம் ஒன்றும் இல்லையா ?

சாக்ரடிஸ்: நாம் பிறக்கும் போது தனியாக வந்தோம். இறக்கும் போது தனியாக மரிப்போம். இறப்புக்குப் பயமில்லை எனக்கு. மரணம் கசப்பானது. ஆனால் நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்கிறார். (மெக்கில்லஸை நோக்கி) மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

மெக்கில்லஸ்: (கண்கலங்கி) நான் எப்படி இந்த நஞ்சைக் கொடுப்பேன் சாக்ரடிஸ் ? நானே அதைக் குடித்துச் சாகலாம் உமக்குக் கொடுப்பதற்குப் பதிலாக ! நானொருவன் சாவதால் ஏதென்சுக்கு எந்த இழப்பும் நேராது ! ஆனால் நீவீர் மரிப்பதால் நேரும் பாதகங்கள் அநேகம் !

சாக்ரடிஸ்: நீ சாவதால் ஏதென்ஸ் நீதிபதிகளின் கோபத்துக்கு நீ ஆளாவாய் ! நான் மரிப்பதால் ஏதென்ஸ் மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்து குதூகலிப்பார் ! நீ சாவதை விட நான் போவதே நியாயமானது. கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

மெக்கில்லஸ்: உலக ஞானிக்கு நான் ஹெம்லாக்கைக் கொடுப்பதா ? உமக்கு நீதிபதிகள் கொடுத்த மரண தண்டனை நியாயமற்றது ! அது அநியாயம் !

சாக்ரடிஸ்: நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

மெக்கில்லஸ்: (அழுது கொண்டே) ஹெம்லாக் மருந்தைக் கொடுப்பது கொடுமை. அதை வாங்கி நீவீர் குடிப்பது மடமை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: நமக்குள் ஏனிந்த போராட்டம் ? என் காலம் முடிந்து விட்டது மெக்கில்லஸ் ! நீ என் ஆயுளை நீடிக்க முயற்சி செய்யாதே ! விதியைச் சதியால் நிமிர்த்தத் துணியாதே ! கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

***************************

[முற்றும்]

தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube

Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,

The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

10. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

11. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.