நான் அறிந்த சிலம்பு – 139
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
கோவலனது உருவ மாறுபட்டால் ஐயுற்ற கௌசிகன், உண்மை தெளிய, மாதவிப்பந்தரை நோக்கிக் கூறுதல்
காதலி தன்னுடன் கானகம் புகுந்த கோவலன்,
கொல்லன் உலைத் துருத்தி போல்
பெருமூச்சுவிட்டு உள்ளம் கலங்கி
உடலின் நிறமும் கறுத்துக் காணப்பட்டதால்,
மாதவியின் தூதுவனாய் வந்த கௌசிகன்
இவன் கோவலன்தானோ? என ஐயமுற்றான்.
“கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்ததால்
கொடிய துயரினை அடைந்த
கரிய நெய்தல் மலர் போல்
நெடிய கண்களையுடைய மாதவியைப்போல்
நீயும் அல்லவா
பொறுக்க இயலாத இவ்வேனிற்வெயிலால்
வாடி வதங்குகிறாய்” என்று
கௌசிகன் அருகிருந்த
மாதவிக்கொடியை நோக்கிக் கூறினான்.
அதைக் கேட்டகோவலன் கௌசிகனை அடுத்துக் கூறுதல்
இங்ஙனம் கௌசிகன் உரைக்கக் கேட்ட கோவலன்
அவனிடம் சென்று,
“நீ இப்போது இங்கு உரைத்ததன் பொருள் யாது?”
எனக் கேட்டான்.
கௌசிகனும் “இவன் கோவலன்தான்
எந்த ஒரு ஐயமுமின்றி
அவன் அடையாளம் அறிந்தேன்”
எனத் தெளிவுற்றான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 44 – 55
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanak/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–
படத்துக்கு நன்றி: கூகுள்