-செண்பக ஜெகதீசன்
நிழல் உன் நண்பன்-
நீ 
நடந்தால் நடப்பான்,
நின்றால் நிற்பான்,
ஓடினால் ஓடுவான் உன்னோடு…
படுத்து உறங்கினால்தான்
பிடிக்காது அவனுக்கு-
போய்விடுவான் உன்னைவிட்டு…
நண்பனே,
நீயும் நிழலாயிரு-
எழுந்துநட எப்போதும்,
விழுந்துவிட வேண்டாம்…!

Leave a Reply