-செண்பக ஜெகதீசன்
நிழல் உன் நண்பன்-
நீ 
நடந்தால் நடப்பான்,
நின்றால் நிற்பான்,
ஓடினால் ஓடுவான் உன்னோடு…
படுத்து உறங்கினால்தான்
பிடிக்காது அவனுக்கு-
போய்விடுவான் உன்னைவிட்டு…
நண்பனே,
நீயும் நிழலாயிரு-
எழுந்துநட எப்போதும்,
விழுந்துவிட வேண்டாம்…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…