-செண்பக ஜெகதீசன்
அம்மாதான் தெய்வமென்றார்கள்
அருமைப் பிள்ளைகள்..
தெய்வத்துடன் வாழ
ஒருமகனும் விரும்பவில்லை-
மருமகள் விருப்பம்போல்..
வெளியூரில் வேலையென்பதால்
வசதிப்படாதாம்,
மூன்றுபேரும் போய்ப் பார்க்க
முதியோர் இல்லமும்
அருகில் இல்லையாம்..
அதனால்,
கோவில் தெய்வங்கள்போல்
அவளும்-
தனியாய் வீட்டில்…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…