என்றென்றும் புத்தாண்டு
சத்தியமணி
பதினாறு பெறுவதற்கு புவியிலே இன்புறவே
பதினைந்து வருவதற்கு பல்லாண்டும் பாடுகிறார்
பதினான்கை புதிப்பிக்க பதினைந்து களிப்புறவே
பதியாதார் பாடாதார் பதம்போட்டு ஆடுகிறார்
வருடம் ஒன்றேற வயதும் ஒன்றேற
வருடும் முடிகற்றை மெலிதாய் நிறமாற
வருவதும் அறியாமல் வந்ததை தெரியாமல்
வருவாய் முழுவதும் செலவாய் ஆக்குவதா?
சாலமுறு வாகனத்தில் சன்னலில் தெரிவதுபோல்
காலங்கள் மாறிவரும் காட்சிகளும் மாறிவிடும்
கோலமதை மாற்றிதம் குணமதனை மாற்றி
ஏலமென விடுவதுவோ இவ்வாழ்க்கை! கேளிக்கையா?
கிடைக்கின்ற ஒருநொடியும் அமிர்த துளியெனவே
படைக்கின்ற ஈசற்கு நன்றியென நவில்வீரே
அன்போடும் பண்போடும் நட்போடு வாழ்ந்தாலே
இன்னும் பல்லாண்டு என்றென்றும் புத்தாண்டு.