-மலர் சபா

மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

நண்பகலில் பொழுதுபோக்கு

குளிர்ந்த நறுமண முல்லை மலரும்
ஆழ்ந்த நீரில் பூத்த குவளை மலரும்
கண்கள் போன்ற நெய்தல் மலரும்                    silambu
இவை அனைத்தும் கூந்தலில் சூடி
மல்லிகையின் வெண்பூக்களால் ஆன
மாலையுடன் இணைந்து
குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவின்
தாதுகள் விரிந்த இதழ்களால் கட்டிய பிணையலை
கொற்கைத் துறையில் கிடைக்கும்
பெரிய முத்துகளால் செய்த வடத்துடன் அணிந்து
தென் திசைப் பொதிகை மலையில் விளைந்த
சந்தனத்தை உடல் முழுதும் பூசி
அழகிய கொடிகளையுடைய மூதூர்க்கு அருகில் உள்ள
சோலைதனில் விளையாடும்  விளையாட்டை விரும்பி

அந்திப் பொழுதைக் கழித்தல்

எற்பாடாகிய பொழுதில்
இளநிலா பொழியும் முற்றத்தில்
மனதிற்கு இனியதாக இருக்கும்
கோலத்தை இளைஞர் பாராட்ட
மனம் விரும்பும் பூம்படுக்கை மேல்
இனிதாக அமர்ந்து

கடைகழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல் கார் காலம்

பூவேலைப்பாடமைந்த செம்பட்டை
இடையின் மீது உடுத்தி
கொத்தாக முடியுள்ள தலையில்
வெண்மை நிறப் பாலைப் பூவைச் சூடி,
சிறுமலையில் பூத்த செந்நறுந்தாளிப்பூவுடன்
மணமுடன் மலர்ந்த குறிஞ்சியையும் சூடி,
குங்கும வண்ணம் கொண்ட செஞ்சந்தனத்தை
மார்புகளில் எழுதி
செங்கொடுவேரியின் செழுமையான பூவால்
கட்டப்பட்ட பிணையலை
செம்மையான சுண்ணம் அப்பிய மார்பினில்
அழகிய பவள வடத்துடன் பூண்டு
மலைகளின் சிறகைத்  தாக்கிய
வச்சிரப்படையுடைய இந்திரனுக்கு
ஆரவாரம் மிகுந்த கூடல் மாநகரத்தில்
தம் செவ்வணியைக் காட்டுமாறு
காரை ஆளும் அரசன்
குளிர்காலக் காற்றுடன் வரும் காலமும்
அந்தக் காலம் அன்றியும்…

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 97
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி:
http://en.wikipedia.org/wiki/Modern_Indian_painting

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.