நான் அறிந்த சிலம்பு – 151
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை
நண்பகலில் பொழுதுபோக்கு
குளிர்ந்த நறுமண முல்லை மலரும்
ஆழ்ந்த நீரில் பூத்த குவளை மலரும்
கண்கள் போன்ற நெய்தல் மலரும்
இவை அனைத்தும் கூந்தலில் சூடி
மல்லிகையின் வெண்பூக்களால் ஆன
மாலையுடன் இணைந்து
குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவின்
தாதுகள் விரிந்த இதழ்களால் கட்டிய பிணையலை
கொற்கைத் துறையில் கிடைக்கும்
பெரிய முத்துகளால் செய்த வடத்துடன் அணிந்து
தென் திசைப் பொதிகை மலையில் விளைந்த
சந்தனத்தை உடல் முழுதும் பூசி
அழகிய கொடிகளையுடைய மூதூர்க்கு அருகில் உள்ள
சோலைதனில் விளையாடும் விளையாட்டை விரும்பி
அந்திப் பொழுதைக் கழித்தல்
எற்பாடாகிய பொழுதில்
இளநிலா பொழியும் முற்றத்தில்
மனதிற்கு இனியதாக இருக்கும்
கோலத்தை இளைஞர் பாராட்ட
மனம் விரும்பும் பூம்படுக்கை மேல்
இனிதாக அமர்ந்து
கடைகழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல் கார் காலம்
பூவேலைப்பாடமைந்த செம்பட்டை
இடையின் மீது உடுத்தி
கொத்தாக முடியுள்ள தலையில்
வெண்மை நிறப் பாலைப் பூவைச் சூடி,
சிறுமலையில் பூத்த செந்நறுந்தாளிப்பூவுடன்
மணமுடன் மலர்ந்த குறிஞ்சியையும் சூடி,
குங்கும வண்ணம் கொண்ட செஞ்சந்தனத்தை
மார்புகளில் எழுதி
செங்கொடுவேரியின் செழுமையான பூவால்
கட்டப்பட்ட பிணையலை
செம்மையான சுண்ணம் அப்பிய மார்பினில்
அழகிய பவள வடத்துடன் பூண்டு
மலைகளின் சிறகைத் தாக்கிய
வச்சிரப்படையுடைய இந்திரனுக்கு
ஆரவாரம் மிகுந்த கூடல் மாநகரத்தில்
தம் செவ்வணியைக் காட்டுமாறு
காரை ஆளும் அரசன்
குளிர்காலக் காற்றுடன் வரும் காலமும்
அந்தக் காலம் அன்றியும்…
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 97
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–
படத்துக்கு நன்றி:
http://en.wikipedia.org/wiki/Modern_Indian_painting