வையவனின் புதிய தொடர் ஆரம்பம்!
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் சொன்ன கதைகளும், சம்பவங்களும் இவரது கற்பனையை விரியச் செய்து எழுத்தார்வத்தைத் தூண்டின. குடும்பம் மீண்டும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள திருப்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது. வையவன் சென்னையிலேயே தங்கினார். ஏதிலியர் இல்லத்தில் அவரது கல்வி தொடர்ந்தது.
வாசிப்பார்வமும் எழுத்தார்வமும் இவரை எழுதத் தூண்டின. மாணவர்களுக்காகதமது 12ம் வயதில் ‘தமிழொளி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதியதோடு ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பள்ளியிறுதி வகுப்பை நிறைவுசெய்த பின்னர் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்றார். அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக்கடை உதவியாளர், மலேரியா ஒழிப்பு சூபர்வைசர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் அவரது எழுத்துப் பணிக்கு மெருகூட்டின. ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகளை ’வையவன்’ என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை 1956ல் ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. எழுத்துப் பணிக்கு வேலை இடையூறாக இருந்ததால் அதிலிருந்து விலகினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963ல் ஆசிரியர் வேலை கிடைத்தது. மேலும் கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். கூடவே சிறுகதை, நாவல்களை தீவிரமாக எழுதத் துவங்கினார்.
இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. இரண்டாவது புதினமான ‘ஜமுனா’விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது கிடைத்தது. தொடர்ந்து நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதி குவித்தார். உயிரோட்டம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி, வைரமணிக் கதைகள், ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம், போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். பாடிப்பறந்த குயில், நங்கூரம், செண்பக மரங்கள், தீபிகா போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. நிசப்தகோபுரம், வெடிவழிபாடு போன்றவை இவரது கவிதை நூல்கள். கண்ணாடிச் சிறையில் சில கடல்கள், ஒரு புதிய பறவை போன்ற இவரது கட்டுரைத் தொகுதிகளும் முக்கியமானவை. ஆனந்த பவன், இடிபாடுகள் போன்றவை நாடகங்கள் ஆனந்தபவன் பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. ‘Loving Animals’ Nation builder Nehru’ போன்ற இவரது ஆங்கில நூல்களும் குபிப்பிடத்தகுந்தன. “வையவன் கதைகள் என்ற தலைப்பில்இரு பாகங்களாக வெளியாகியுள்ளன.
நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவையே இவரது கதைகளின் பேசுபொருளாகும். வார்த்தை ஜாலங்களோ, மிகைப்படக் கூறுதலோ இல்லாமல் உள்ளதை உள்ளபடிச் சித்தரிப்பவை இவரது படைப்புகள். இவரது பல படைப்புகள் இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் காமுகண்டே டைரி என்ற நாவலை ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெர்த்த மகாபலியின் மக்கள் (1982) என்ற நூல் தமிழக அரசின் சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது. ஆண்மை, மாலை மயக்கம் போன்ற படைப்புகளுக்காக இலக்கியச்சிந்தனை பரிசினைப் பெற்றுள்ளார். இளஞ் சிறார்களுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரை நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. மகாகவி என்னும் பாரதி பற்றிய விமர்சனக் கட்டுரை நூல் அமுதசுரபி – ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதி பண்பாட்டு மைய விருதையும் பெற்றிருக்கிறது. ஜெகசிற்பியனின் படைப்புலகம்பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ஜெகசிற்பியன் ஒரு பார்வை நூலும் குறிப்பிடத்தகுந்தது. ஆழ்கடலியல் லேசர், அழிவில்லாத ஆற்றல், விண்வெளியும் மனித மேம்பாடும், நோயறியும் கருவிகள் போன்ற இவரது அறிவியல் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. தனது அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறார். இவரது கதை வசனத்தில் உருவான நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் கிராமப்புற மேம்பாடுபற்றிச் சித்திரிக்கும் சிறந்த குறும்படமாகும்.
சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிய வையவன், பணி ஓய்விற்குப் பின் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாமே ஆசிரியராக, பதிப்பாளராக இருந்து தனது படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 100 நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். தனது மகள் பெயரில் அமைந்த தாரிணி பதிப்பகம் மூலம் தமிழிலும், English Titles பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் ஐக்கியா டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுது்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். அகவை எழுபத்தைந்தைக் கடந்த போதும் இளைஞர்களுக்கு இணையாக இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் பங்களித்து வருகிறார். innaiyaveli.blogspot.in என்பது இவரது வலைப்பதிவாகும்.
மனைவி சகுந்தலா, மகள் தாரிணி, மகன் ஜீவகன்.மகனுடன் சென்னையில் வசித்துவரும் வையவன், புகழையோ, பிரபலத்தையோ விரும்பாது, தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்ளாது அமைதியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் மதிக்கத்தக்கவர் வையவன்.
‘ஐந்து கை ராந்தல்’ புதினம் குறித்த மதிப்புரை
“உலக இலக்கிய வரிசை யில் சேர வேண்டிய நாவல்”
டாக்டர். திரு. வி.ஆனந்தமூர்த்தி
((M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D )
எனது ஆய் வுப் படிப்பிற்காக நான் பல மொழிகளில் வெளிவந்த உலக நாவல்களை வாசிக்கவே ண்டி வந்தது. தமிழ் வாசக தளத்திற்கு பல்வே று அயல்நாட்டு நாவல்களை அறிமுகப்படுத்திய விமர்சகர் திரு. க.நா.சு ப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்த பல நாவல்களை அந்த ஆய்வின் பொருட்டு வாசிக்க வே ண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது
அந்தப் பின்னணியில் உலக நாவல் இலக்கியம் எனக்களித்த மாபெரும் தரிச னத்தில் ஏற்பட்ட புலப்பாட்டில் திரு.வையவன் அவர்கள் எழுதியுள்ள ஐந்து கை லாந்தர் கையெழுத்துப் பிரதியாக என்னிடம் வந்தது.
தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. தம் நாவல் கலைத்திறனையும் இலக்கிய மே தைமையையும் வெளிப்படுத்திய பல நாவலாசிரியர்கள் தொட்ட கதைக் கரு எதுவும் இல்லாத புதுமையாக வளர்ந்துவரும் ஒரு நகரத்தின் பல நூற்றாண்டுகளைப் பிரதிபலிக்கிற கருப்பொருள் வையவன் ஏற்ற கருப்பொருள்.
இந்திய நாகரிகத்தை.. இந்திய நாட்டை வந்து தாக்கிய ஜைனம் பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என்ற நான்கு மதங்களையும் சார்ந்த கதாபாத்திரங்களை வெவ்வே று நாட்டின் மக்களை ஒன்றுகூடி ச ந்திக்க வைத்து ஒரே நகரின் வாழ்க்கைக் களத்தில் அவர்களை நடமாடவிட்டு ஏற்கெனவே பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்கள் அவர்களை எப்படி தமக்குள் ஒருவராக ஏற்றுக்கொண்டு நேசித்தும் பகைத்தும் அதே சமயம் பின்னிப்பிணைந்து வாழ்கிற வாழ்க்கையைக் காட்டும் நாவல் இது.
வையவனின் பாத்திரப்படைப்புகள், நாவல் கலை ,உணர்வுகள் உரையாடல்களையும் சூழ்நிலைகளையும் அவர் விவரிக்கும் பாங்கு தமிழுலகம் நன்கறிந்த சேதி. இந்த நாவலின் உலகு தழுவிய பார்வையால் மனித குலத்தைஏ மார்போ டு மார்பாகக் கட்டித தழுவிக்கொள்ளும் அவரது மே ன்மை எடுத்துக் காட்டாகி நிற்கிறது.
ரஷ்ய எழுத்தாளனின் இதயம் மாணிக்க மணியாகத் திகழ்ந்தது என்று புஷ்கினைப் பற்றிக் கூற னே ர்ந்தபோ து கோகுல் கால் கூறியதை எண்ணிப்பார்க்கிறேன்
இந்திய எழுத்தாளனின் அதுவும் தமிழ் எழுத்தாளனின் இதயம் எந்த மொழி இலக்கியத்திற்கும் இளைத்ததல்ல. நேசம் ம் தவிர அவர்களால் வே று எவ்விதமாகவும் மனிதர்களையோ தேசத்தையோ பார்க்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல். கருத்தோ ட்டங்கள் நாவல் கலை நுணுக்கங்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்தே போ னாலும் அறிவுத் தேட்டங்கள் கணத்திற்குக் கணம் புதுமைகளைப் படைத்துக் கொண்டே எ ன்றாலும் உயிர் நேசம் உயிர்கள் ஒன்றோடு ஒன்று காட்டும் பரிவு பற்று பாச ம் என்பன ஒருபோ தும் மாறாது மகர நட்சத்திரம்போல் ஒளி வீ”வதை நாவல் வடிவில்வையவன் புலப்படுத்தி இருக்கிறார்
“‘பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.
ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.
பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:
‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது..” என்று மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்னையான உயிர்வாழ்தல் பற்றிய அவர் பார்வை வெளிப்படுகிறது
வேற்றுமையில் ஒற்றுமை என்ற அபூர்வமான பந்தப்பிணைப்பை விலகி நின்று அவர் தரிசித்து நம்மையும் தரிசிக்க வைக்கிறார்.
இத்தகைய ஒரு நாவல் தமிழுக்கு லபித்தது அதிருஷ்டம் என்று தான்சொல்ல வேண்டும் உலக நாவல் இலக்கிய வரிசை யில் ஒன்றாக வைத்துப் போ ற்ற வே ண்டிய நாவல் இது.எனக்கு டால்ஸ்டாய் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை