மீ.விசுவநாதன்

images
சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
என்னுள் இருந்து விழிகாட்டி இருந்தாய் சிவனே வழிகாட்டி !
கன்னம் குழித்துச் சிரிக்கின்ற கரும்புச் சுவையாம் சரவணனின்
சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள் செய்நன்னா !

உயரே பரந்த ஒலிவானம் உதிரும் மொழியோ சிவநாமம் !
பயனை நினைத்துப் பணியாத பனிபோ லிருப்போ னுருவாகும் !
நயனம் இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
அயனும் அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !

(18.03.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிவபிரதோஷம்

  1. அருமையான கவிதை.வாழ்க!
    யோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.