மீ.விசுவநாதன்

சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
என்னுள் இருந்து விழிகாட்டி இருந்தாய் சிவனே வழிகாட்டி !
கன்னம் குழித்துச் சிரிக்கின்ற கரும்புச் சுவையாம் சரவணனின்
சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள் செய்நன்னா !
உயரே பரந்த ஒலிவானம் உதிரும் மொழியோ சிவநாமம் !
பயனை நினைத்துப் பணியாத பனிபோ லிருப்போ னுருவாகும் !
நயனம் இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
அயனும் அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !
(18.03.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

Leave a Reply