-விஜயகுமார்

கேடுநிறை மாந்தர்களின்- குணக்
கேடுநிறை எண்ணங்களினால்
பாடுஅது பெரும்பாடு கவியெழுதும்
கவிமகள்கள் படும்பாடு!

கவிதை எதுவென்றறியாமல்
கவிதை இதுதானென்று வீண்வாதம் புரிந்து
கவிதையினைக் கொல்வோர் நடுவில்
கவிதையைக் கவிதையாய்ப் படைக்கும்
கவி தாய்களைக் காயப்படுத்தாதீர் கயவரே!

மகளிரவர் மாண்புதனைப் பண்புடனே
போற்றிட்ட கவிகள் உதித்த நாடது நம்நாடாம்!
அம்மி அரைத்த மங்கையவள் மகத்துவத்தைக்
கும்மிப் பாட்டிலுரைத்த கவிநம் மகாகவியாம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *