மீ.விசுவநாதன்

images

கடின உழைப்பால் மேலேறி
கதைகள், கவிதை, படங்களெனப்
பிடித்த இடமோ பேரிடம்தான் !
சிக்குப் பிடித்த வாழ்க்கையினைப்
பிடித்த பேனா முனையாலே
பிரகா சமாக்க உதவியவர் !
முடித்த செயல்கள் எண்ணிடவே
முடியா ஜெயத்தின் காந்தனவர் !

உயர்ந்த சிந்தை கொண்டதனால்
உணர்ந்த மந்திரச் சொல்லாலே
அயர்ந்து கிடந்த மக்களினை
அன்பாய்த் தூக்கி நிறுத்தியவர் !
நயந்து செய்த அவர்படைப்பு
நாட்டை நிமிர்த்த உதவியது ;
வியந்து வணங்கி நினைக்கின்றேன்
“ஜெயகாந் தன்நும் புகழ்வாழி !”

(09.04.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *