மீ.விசுவநாதன்

148514_454117937957279_1723256555_n
ஆயிரம்மாய் நாமங்கள் சொல்லி
வாய்மணக்கும் ஆன்மீக மல்லி !
தூய்மையிலா உள்ளுக்குள்
நாய்குரைக்கும் “லொள்ளுக்குள்”
சாய்ந்துவிடா தீயகுணம் வில்லி ! (1)

உருண்டுவரும் நாள்போயே போகும்
இருண்டமனம் உந்தாளை ஏகும்
இனியவனே என்விழியே
இனியிவனுள் நீநுழையே
மருண்டமனம் ஆதிசிவ மாகும் ! (2)

சுமையெனவே அகங்காரம் ஏற்றி
சுவையெனவே எண்ணவைத்தாய் மாற்றி !
நவநவமாம் சிவஒளியே !
திவலையிவன் ஒர்துளியே !
இவையெல்லாம் உன்னருளே போற்றி ! (3)

(குறும்பா:( காய், காய், மா,
காய், காய், மா,
காய், காய்,
காய், காய்
காய், காய், மா )

(16.04.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.