எலும்பிலிருந்தா பிறந்தாய் ?
கட்டாரி
அம்மன் கோவிலில்
மணியடித்துக் கொண்டிருக்கிறது….
சங்கிலியைப் பறிகொடுத்தவள்
கதறியபடியே
ஓடிவந்து கொண்டிருந்தாள்..
கடைசிப் பேருந்தை
தவறவிட்டவள்…
வன்புணரப்பட்டிருந்தாள்…
நடந்ததைச் சொல்லத் தெரியாத
சிறுபிள்ளைக்கு
உடம்பெங்கும் காயம்…
பிணங்களாய் சிலர்
சிரித்துக்கொண்டே விளக்கொளியில்
நிர்வாணம்
உடுத்தியிருந்தார்கள்….
மூன்றாம் சாமத்தில்
ஒருத்தி குளிக்கப் போயிருந்தாள்…
மணியோசையும் ஓய்ந்த
பாடில்லை…..! கூடவே
மழையும் சேர்ந்துகொண்ட பொழுதுகளில்
அரை மயக்கத்திலேயே
ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கிறாள்…..
இன்னொரு.. பெண்…!!