கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமானுஜாய….
சேஷா வதாரரே ஆஷாட பூதிகள்
த்வேஷம் கலைத்து ,திருக்கோஷ்டி -கோஷமாய்,
நார யணநாமம், நால்வருணம் ஓதிட,
காரண மானவரே காப்பு ….கிரேசி மோகன்….
சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
நாமா வளியயை நவிலவைத்த -ராமா
னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
புஜனே நிஜத்தில் புகுத்து ….கிரேசி மோகன்….