-சுரேஜமீ

மாண்புடைப் பண்பும் நெறியும் உள்ளேகி
மண்ணில் பயனுற வாழ்தற்கு – நாளும்
மனதினில் வள்ளுவம் ஏகிட – ஞாலமும்      valluvar
மாந்தரின் சொர்க்கம் இனி!

வானுறை வாழ்விற்கு வையகம் தந்தது
மாண்புகள் கொண்டு மறைநிக ரானது
மானுடம் ஓங்கிடத் தம்மை விளக்கும்
வள்ளுவம் படித்திடக் காண்!

நாளும் மனதில் வள்ளுவம் ஏகிட
நாமும் பெறலாம் நற்குணம் வாழ்வில்
நிகரிணை என்றும் நமக்கிலை – சத்தியம்
நீயறிவாய் செப்பிடக் குறளை!

அறிவுசெல் உள்ளம் தொடங்கிய நாளாய்ச்
செறிவாய் நன்கு படித்திருந்தால் – வள்ளுவம்
வாழ்வில் நெறிவகைப் பண்பும் திறமும்
விளக்கிடும் ஞாலம் சிறந்து!​    

பிறப்பும் வாழ்வும் பிரிவும் நட்பும்
பகையும் வெற்றியும் வீரமும் காலமும்
பண்பும் நெறியும் காமமும் – கற்றுணர்
வள்ளுவம் சொல்லும் வழி!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *