வள்ளுவ மாலை
-சுரேஜமீ
மாண்புடைப் பண்பும் நெறியும் உள்ளேகி
மண்ணில் பயனுற வாழ்தற்கு – நாளும்
மனதினில் வள்ளுவம் ஏகிட – ஞாலமும்
மாந்தரின் சொர்க்கம் இனி!
வானுறை வாழ்விற்கு வையகம் தந்தது
மாண்புகள் கொண்டு மறைநிக ரானது
மானுடம் ஓங்கிடத் தம்மை விளக்கும்
வள்ளுவம் படித்திடக் காண்!
நாளும் மனதில் வள்ளுவம் ஏகிட
நாமும் பெறலாம் நற்குணம் வாழ்வில்
நிகரிணை என்றும் நமக்கிலை – சத்தியம்
நீயறிவாய் செப்பிடக் குறளை!
அறிவுசெல் உள்ளம் தொடங்கிய நாளாய்ச்
செறிவாய் நன்கு படித்திருந்தால் – வள்ளுவம்
வாழ்வில் நெறிவகைப் பண்பும் திறமும்
விளக்கிடும் ஞாலம் சிறந்து!
பிறப்பும் வாழ்வும் பிரிவும் நட்பும்
பகையும் வெற்றியும் வீரமும் காலமும்
பண்பும் நெறியும் காமமும் – கற்றுணர்
வள்ளுவம் சொல்லும் வழி!