ajay

நேபாளத்தில் கோர பூபாளம் !
சி. ஜெயபாரதன், கனடா

 

 

இமயத் தொட்டிலில் ஆட்டமடா !

இயற்கை அன்னை சீற்றமடா !

பூமாதேவி சற்று தோள சைத்தாள் !

பொத்தென வீழும் மாளிகைகள்

பொடி ஆயின குடி வீடுகள் !

செத்து மாண்டவர் எத்தனை ?

உற்றார், பெற்றோர் இழந்தவர் எத்தனை ?

கைகால் முறிந்தோர் எத்தனை ?

இமைப் பொழுதில்

எல்லாம் இழந்தவர் எத்தனை ?

கட்டிய இல்லம், சேமித்த செல்வம்

பெட்டி, படுக்கை, உடுப்பு,

உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !

அந்தோ !

வசந்த கால வாடைக் காற்றில்,

அழும் சேய்க ளோடு

தெரு மேடையில் தூங்குகிறார் !

வானமே கூரை !

சுவரில்லை ! கதவில்லை !

போர்த்திக் கொள்ள

துணி யில்லை !

மானம் போனது, மதிப்பு போனது !

தானம், தர்மம் நாடி

வானம் நோக்கித் துதிக்கிறார் !

கடவுளுக்கு

கண்ணில்லை ; காதில்லை !

கருணையும் இல்லை !

எண்ணிலா நேபாளியர் புதைபட்டார்

உயிரொடு !

இடிந்த வீடுகள் புதை காடாயின !

எங்கெங்கு வாழினும்

இன்னலடா!

ஏழு பிறப்பிலும் தொல்லையடா !

சூழ்வெளி மட்டும்

பாழாக வில்லை யடா!

ஆழ்பூமிக் குள்ளும்

புற்று நோய் தொற்றுமடா !

++++++++++++++

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *