நிலா மொழி
குமரி எஸ். நீலகண்டன்
நான் களித்த எனது
அம்புலிப் பருவத்திலிருந்தே
உன்னைக் காண்கிறேன்…
இன்றும் நீ
அப்படியே இருக்கிறாய்
என்றேன் நிலாவைப்
பார்த்து வியந்து…
அதற்கு நிலா சொன்னது
நாற்பது ஆண்டுகளாய்
நானும் உன்னைக்
காண்கிறேன்..
அப்போது போலில்லை
நீ இப்போது.
மிகவும் மாறி
விட்டாய்.. என்று
வருத்தத்துடன்
சொன்னது..
இன்னும் சொன்னது…
நீ மாறி விட்டாயென்று
நான் சொன்னது உன்
உருவத்தில் மட்டுமல்ல…
என்றது குறிப்பாய்.
மாற்றம் மட்டுமே மாறாத
ஓன்று இந்த மண்ணுலகில்!!!
என சொல்லுங்கள் அந்த
வெண்ணிலவிற்கு!!!
மற்றொன்றும் சொல்லுங்கள்
வெண்ணிலவே நீ பூமிக்கு
வந்துபார் புரியும் இந்த
மாற்றங்களின் பரிணாமம்!!!