-பா. ராஜசேகர்

நித்தம்
உன்னை
நினைக்கையில்
போராட்டம் !

கத்திமேல
நடந்திடும்
கனவுபோல்
தீ மூட்டும் !

இரண்டு படி
ஏறினா
நாலு படி
வழுக்கிடும் !

வித்தகனைப்
பார்க்கையில்
கற்ற வித்தை
மறந்திடும் !

தோல்வி வந்து
தழுவிடும்
சுற்றம் நம்மை
இகழ்ந்திடும் !

உன்னை முத்தம்
கொடுக்கணும்
வாரி நெஞ்சில்
அணைக்கணும் !

கட்டித்தங்கம்
உன் நினைப்பே
கண்ணுக்குள்ள
உன் தவிப்பே !

வாழ்க்கையின்னா
ஜெயிக்கணும்
ஒவ்வொரு நொடியும்
உழைக்கணும்!

முயற்சிக்கு
ஆமை கதை
கவிதைன்னா
உவமைக் கதை !

வெற்றி வந்து
தோளைத்தட்டும்
புகழ் வந்து
விண்ணை முட்டும் !

முயற்சியை
மனதில் கொள்ளு
வாழ்க்கையில்
வெற்றி கொள்ளு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *