சிவபிரதோஷம்!
-மீ.விசுவநாதன்
மணிக்கணக்காய் கண்மூடி உன்னை
மனதினிலே கண்முன்னால் காணத்
துணிவில்லை பொறுமையுமே இல்லை
துளிகூட பக்தியுளம் பேணாப்
பிணியாளன் என்னும்பேர் பெற்றேன்
பித்தனுனை எண்ணுவது மில்லை
அணியணியாய் நற்கவியால் உன்னை
அன்போடு போற்றுவது மில்லை!
பெற்றோரைத் திட்டியவன்; ஊரில்
பெரியோர்சொல் கேட்காமல் நித்தம்
நெற்றிநீரைப் பூசாமல் காலி
நெற்றியாக வைத்தவனின் உள்ளம்
பற்றியவா! பரமசிவா! உன்னைப்
பக்திசெயா மூடனுக்கும் ஞானம்
பற்றிடவே அருள்செய்தாய்! அந்தப்
பரந்தமனம் எனக்கில்லை ஈசா!
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், காய், மா, காய், காய், மா )