-மீ.விசுவநாதன்

மணிக்கணக்காய் கண்மூடி உன்னை
     மனதினிலே கண்முன்னால் காணத்
துணிவில்லை பொறுமையுமே இல்லை  sivamjpg
     துளிகூட பக்தியுளம் பேணாப்
பிணியாளன் என்னும்பேர் பெற்றேன்
     பித்தனுனை எண்ணுவது மில்லை
அணியணியாய் நற்கவியால் உன்னை
       அன்போடு போற்றுவது மில்லை!

பெற்றோரைத் திட்டியவன்; ஊரில்
     பெரியோர்சொல் கேட்காமல் நித்தம்
நெற்றிநீரைப் பூசாமல் காலி
     நெற்றியாக வைத்தவனின் உள்ளம்
பற்றியவா! பரமசிவா! உன்னைப்
       பக்திசெயா மூடனுக்கும் ஞானம்
பற்றிடவே அருள்செய்தாய்! அந்தப்
       பரந்தமனம் எனக்கில்லை ஈசா!      

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், காய், மா, காய், காய், மா )

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.