வல்லமை டாட் காம் பற்றி என்னுடைய கருத்து!

0

வல்லமை டாட் காம் பற்றி என்னுடைய கருத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.

வல்லமை டாட் காமில் முதன் முறையாக நுழைந்தேன். பார்த்தேன். திகைத்தேன். !கடல் மாதிரி இருக்கிறது. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மூன்றையும் தாரக மந்திரமாக கொண்ட வல்லமை பலருக்கு உபயோகமாகயிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. அதில் பிரசுரமாகும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நிழற்படங்கள், தலையங்கம், நேர்காணல்கள், சமையல் பகுதி, ஓவியங்கள், ஒலி வெளி, காணொளி மற்ற பகுதிகள் பிரமிக்க வைக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “ பிரமாதம் “ என்பேன்.

எவ்வளவு பயனுள்ள கட்டுரைகள், பொருள் பொதிந்த தலையங்கம் , சுவைக்க சுவைக்க திகட்டாத கவிதைகள் , எண்ணிறந்த படைப்புகள் ! எல்லாவற்றையும் படிக்க ஒருவருக்கு நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு நாளுக்கு ஒருமுறையாவது எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வலையத்தில் நுழையலாம். விரும்பியதை படிக்கலாம். தொடர்ச்சியாக வல்லமையை ஒருவர் படித்து கொண்டு வந்தால் அவருடைய தமிழ் வளமாகும் என்பது திண்ணம். ஆர்வம் இருந்தால் கவிதையை உருவாக்கலாம். ஐந்து வயதில் இவ்வளவு முன்னேறியிருப்பது சாதனைதான். ஆண் வெற்றியாளருக்குப் பின்னால் ஒரு பெண்ணும், ஒரு பெண் வெற்றியாளருக்குப் பின்னால் ஒரு ஆணுமிருப்பதை போல் வல்லமையின் சாதனைக்கு, வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர் குழுமம் இருக்கிறது. அவர்களுடைய கடின உழைப்பு புரிகிறது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வல்லமை மேலும் மேலும் விருட்சமாக வளர என் வாழ்த்துக்கள்.

என். ஸ்ரீதரன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.