வல்லமைக்கு வயது ஆறு!

 -றியாஸ் முஹமட்

வண்ணத்தமிழ் கொண்டு
வற்றாது தினந்தோறும்
வானத்துச் சூரியனாய்
வாசலிலே படியேறி
வந்திகள் பாடிச்செல்லும்
வாசகத்திற்கு இடந்தந்து
வாசகர் நெஞ்சிலே
வருடலாய்ப் பலசொல்லி
வல்லவன் என்றொரு
வழுவாத பெயர் தந்து
வழிமுறை பலதையும்
வன்மனதில் பதியவைத்து
வள்ளுவன் மொழிந்த
வாசகம் தான்உணர்த்தி
வாஞ்சை காட்டி பிறர்
வாதை மனதில் போக்கி
வாமதேவனவன் கருணைதனை
வாடாமலராய் மணக்கவைத்து
வாய்மை ஒன்றையே வேத
வரிகளாய் தன்னுள் கொண்ட
வல்லமையே…
உன்னை
வாழ்த்துகின்றேன் இன்னும்
வாழ்க வாழ்கவென்று…
வாழ்க நின் புகழ்
வாழிய வாழியவே…!!!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *