நாகினி
வந்த எதுவும்
விரும்பிய வரமல்ல
சென்ற யாவையும்
செதுக்கி பதித்தவையல்ல!
வந்ததை விரும்பி
வெந்ததைத் தின்று
விதி வந்து மாள
வெட்கித் தலைகுனிவதென்ன!
எழுதிய எழுத்ததை
ஏளனம் செய்து நொந்திட்டால்
கையில் அகப்பட்ட வாழ்வு
கடைச்சரக்கு ஆகிடுமோ!
விதிக்கப்பட்ட விதியை
வாழ்வின் நிலை யென்று
விருப்புடன் ஏற்று முன்னேற
வாய்ப்பு வாசல் திறந்து
விடியும் பொற்காலம்!
.. நாகினி

Leave a Reply