-பா.ராஜசேகர்
சிந்தையிலே
விந்தையுண்டு
பிறர்க்குதவும்
குணமும் ஒன்று !
இல்லாதோர்
காண்கையிலே
இளகிநின்று
மனம் நோகும் !
பிறர்க்கீய
மனம் துடிக்கும்
தன்
பசி மறக்கும் !
மறுநொடி
மடிதேடும்
உதவும்
மனம் மகிழும் !
பலன் காணாது
பழகும்
வரம்கண்டு
வாழும் !
சிந்தையிலே
அரிய விந்தை
வள்ளல்
குணம் ஈகை !
செல்வத்துள்
சிறப்போன்றே
இச்செல்வக்
குணம் நன்றே !
பிறர்க்குதவத்
தேவை
செல்வச்செழிப்பல்ல…
மனக்களிப்பே!

Leave a Reply