-பா.ராஜசேகர்

சிந்தையிலே
விந்தையுண்டு
பிறர்க்குதவும்
குணமும் ஒன்று !

இல்லாதோர்
காண்கையிலே
இளகிநின்று
மனம் நோகும் !

பிறர்க்கீய
மனம் துடிக்கும்
தன்
பசி மறக்கும் !

மறுநொடி
மடிதேடும்
உதவும்
மனம் மகிழும் !

பலன் காணாது
பழகும்
வரம்கண்டு
வாழும் !

சிந்தையிலே
அரிய விந்தை
வள்ளல்
குணம் ஈகை !

செல்வத்துள்
சிறப்போன்றே
இச்செல்வக்
குணம் நன்றே !

பிறர்க்குதவத்
தேவை
செல்வச்செழிப்பல்ல…
மனக்களிப்பே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.