தாகூரின் கீதங்கள் – 8 ஆத்மாவைத் தேடி

0

ajay

தாகூரின் கீதங்கள் – 8

ஆத்மாவைத் தேடி

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

அறுவடை மாதங்களில் பரபரப்பாய்ப்

புத்தொளி வீசும் வேளைகளில்

புல்லிலைகள் போர்த்திய

புவித் தளமும் நடுங்குகிறது !

அப்போது தேடுகிறேன்

என் ஆத்மாவை !

பூரிப்பில் மூழ்கும் என் இதயம் !

தெரியும் எனக்கு

வாய் மொழியாக அந்த

வரிகளை !

மௌன பூமியின் மனத்திலே

எப்போதும்

உயிருடன் உலவி வருவது

ஓருணர்ச்சி !

ஈருடல் இணைந்த

நம் ஆத்மக் கூட்டுறவிலே

நீயும் நானும்

முடிவில்லா யுகங்களில்

நீடித்திருக்க வேண்டும் !

இலையுதிர் காலத்துப் பொன்னொளியில்

நிலை தடுமாறினோம்

பல்லினத்துப்

புல்லிலைகள் மீதிலே !

 

*********************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mumbai : 400023
**********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.