-பா.ராஜசேகர்

நரகத்தின்
வாசலைத் தாளிடு
ரஹ்மத்தின்
வாசலைத் திறந்திடு !

இஸ்லாத்தின்
தத்துவம் மேன்மையே
இறைவன்
அருளியது உண்மையே!

உண்ணாமை
மட்டும் நோன்பல்ல
ஐம்புலனை
அடக்கினால் தீங்கல்ல!

பசித்திரு
பிறர்பசியறி நீகொடு
வலியறி
மனமிரங்கு உதவிடு !

நாவடக்கு
புறம்பேசும் பழிவிடு
செவிமடு
தீயவைகளை நீவிடு!

இச்சைகளை
நீ தவிர்
நிச்சயமில்லா
இவ்வுலகம் நீ உணர் !

ஆன்மிகம்
தழைக்கவும்
மனிதம்
செழிக்கவும்
மனிதா…
துளியேனும்
இறைவணங்கு !

ரமலான்
வாழ்த்துக்கள் நண்பர்களே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.