-பத்மநாபபுரம் அரவிந்தன்

சில வாசனைகள் நம்மை
அதை – முன்பு எப்பொழுதோ
நுகர்ந்த காலத்திற்கு
அழைத்துச் சென்று
அச்சம்பவத்தின்
நிழலுருவை மீட்டுத் தரும்…!

அப்படியொரு மீட்டெடுப்பு
நிகழ்ந்தது இன்றெனக்கு
இவளின் வாசனை
என்னுள் அதிரப்பள்ளி
அருவியின் நினைவினை
மீட்டெடுத்து வலைபோல்வீசி
மனம் பின்னோக்கி நகர்ந்து
அருவியில் குளித்தது
நகர்வாழ் இவளுக்கு
எப்படி வந்தது
காட்டருவி வாசனை…?

இவ்வாசனை இனி
நுகர்கையில்
இவள் நினைவும்
உடன் வருமோ
அருவியில் நனைந்ததைப் போல்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *