அப்துல்கலாமுக்கு அஞ்சலி!
-சரஸ்வதி ராசேந்திரன்
வையம் வியக்கும்
விஞ்ஞானி நீ
விண்கலச் சாதனையாளன்
ஏவுகணை நாயகன்
கனவுகளின் நாயகன்!
நினைவுகளின் நிஜம் நீ
தன்னலம் கருதாத்
தலைவன் நீ
தன் சுகம் விடுத்துத்
தமிழினம் காத்தவன்!
விருதுகள் கூட உன்னால்
பெருமை அடைந்தன
இந்திய வீணையை மீட்டியவன் நீ
இன்று உன் வீட்டு வீணை
இசைப்பவனை இழந்து நிற்கிறது!
தமிழினமே உன் இழப்பால்
கையறு நிலையில்
கலங்கி நிற்கிறது
விரல் இழந்த கையாய்
நரம்பிழந்த வீணையாய்
நலமிழந்து வாடுகிறோம்!
நீவிட்டுச்சென்ற வீணையை
மீட்ட இளைஞர்கள் எழுந்து விட்டனர்
அதில் தேச நலன் நயமுடன்
மீட்டப்படும் என உறுதி கூறுகிறோம்!
கலாமே உன்னை இன்னும் சிறிதுகாலம்
காலன் களவாடாமல் இருந்திருந்தால்
இந்தியா வல்லரசாவதைக் கண்டிருப்பாய்
உன் பிறப்புச் சம்பவமானாலும்
உன் இறப்பு சரித்திரமாகிவிட்டது
அமைதி கொள் அறிவுலக மேதையே!