அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!

0

பவள சங்கரி

ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு.

G_T3_646

பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

apoosalar

திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவரான பூசலார் நாயனார் என்பவர் சிறந்த சிவபக்தராகவும், அடியார் சேவையில் திளைத்து இருந்ததோடு ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்தவர். இறைவன் மீதுகொண்ட ஆழ்ந்த பக்தியானல், அவருக்கு மிகப்பெரும் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய ஏழ்மை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அறிந்தோரிடம் உதவி கேட்டும் பெற இயலாத நிலையில் பெரிதும் உளம் நொந்தார். பெருஞ்செல்வம் நிதியாகப் பெறுமளவிற்கு வாய்ப்பு அமையாத பூசலார் நாயனார், புறத்தே அமைக்க முடியாத பிரம்மாண்ட ஆலயத்தை அகத்தே அமைக்கும் மனத்திட்பம் பெற்றார். அதற்குத் தேவையான பொருட்களான, கருங்கல், மரம், சுண்ணாம்பு, மண், கருவி, கரணங்கள் என அனைத்தையும் மனத்திலே கொண்டு சேர்த்துக் கொண்டார். அடுத்து ஆலயம் அமைக்கும் பணி துவங்கியது. தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து, ஐம்புலன்களையும் கட்டுக்குள் நிறுத்தி, ஆகம முறைப்படி மனத்தினுள்ளே கோயில் எழுப்பத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதைக் காட்டிலும் வேறு சிந்தையேதும் கொண்டாரில்லை. அகத்தே எழும்பிய ஆலயத்தில், ஆச்சாரப்பூர்வமாக, மூலவருக்கான தனியறை, கொடி மரம், அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , பிரம்மாண்டமான மதில்கள், திருக்குளம், திருக்கிணறு, யாகசாலை , அலங்கார மண்டபம், ராசகோபுரம் போன்ற அனைத்தையும் அற்புதமாக உருவாக்கி முடித்தார்.

பூசலார் நாயனார் இத்தகைய மனக்கோயில் அமைத்த காலம், “காடவர் கோமான் கச்சிக் கற்றளி யெடுத்து முற்ற, மாடெலாஞ் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்த” காலம் என்கின்றனர் ஆன்றோர். ஆம், அதே காலகட்டத்தில், காஞ்சி மாநகரிலும், கி. பி. 685 – 720 வரை ஆண்ட பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் என்ற அரசனால் மிகச் சிறந்த கட்டிடக்கலையுடன் பெரும் சிவாலயம் ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கான அனைத்து கட்டுமானப் பொருட்களும் பல்வேறு இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, தேர்ந்த சிற்பிகள் மூலம் அற்புதமான சிற்பங்களும், ஏனைய கலைப்படைப்புகளும் உருவாகிவிட்ட நிலையில், கயிலைநாதனுக்கு தாம் எழுப்பியுள்ள அழகு நயம் வாய்ந்த கற்கோவிலுக்கு குடமுழுக்கு வைபவம் செய்யும் நாளைக் குறிக்க தேர்ந்த வேதியரை அழைத்தான் மன்னவன். அதற்கான நாளும் குறிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டு, மக்கள் ஆலயத் திறப்பு விழாவிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். விடிந்தால் குடமுழுக்கு நிகழ்ச்சி என்ற நிலையில், பல்லவ மன்னன் மனமெல்லாம் பூரிப்புடன் மஞ்சத்தில் கண்ணயர்ந்திருந்தான். அப்போது ஆழ்நித்திரையில் ஆண்டவனார் தோன்றி,

நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளை
நாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.

அதாவது, அன்பர் பூசலார் நீண்ட நாட்களாக நினைந்து உருவாக்கியுள்ள ஆலயத்திற்குள் நாளைப்புக முடிவெடுத்துள்ளோம். அதனால் உன் நிகழ்ச்சியை பின்னொரு நாளில் தள்ளி வைத்துக்கொள்வாயாக.. என்று சொல்லிப் போனார்.

சங்கரனார் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு பேரரசனால் கட்டப்பட்ட கோயில் எந்த அளவிலும் இணையாகாது என்பதை உணரச் செய்தார்.

சேக்கிழார் திருவாக்கில், “சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்” என்பதையும் அறியலாம்.

நித்திரையிலிருந்து சட்டென விழித்த மன்னனுக்கு பேராச்சரியம். ஆண்டவன் வாக்கு பொய்யாகாதே. ஆயினும் தாம் எழுப்பியுள்ள ஆலயத்தைக்காட்டிலும் சிறந்ததொரு ஆலயம் எப்படி தன் கவனத்திற்கு வராமல் போனது என்று அதிசயித்தவாறு, உடனே அப்படிப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும் என்று தேடிச் சென்றான் பல்லவ மன்னன். வழியில் கண்ட ஒரு விவசாயியிடம் இதுபற்றி விசாரித்தபோது, ‘இலுப்பை மரத்தடியில் பித்தர் ஒருவர் கோயில் கட்டுவதாக பிதற்றிக் கொண்டிருந்தார் , அவரைப் போய் கேளுங்கள்’ என்று சொன்னார். அவரைச் சென்று பார்த்த மன்னன் அதிர்ந்து போனான்.

வேதியரை வீழ்ந்து வணங்கினான் வேந்தன். பின் பூசலாரின் எண்ணமும், அவர்தம் பக்தியின் ஆழமும் அறிந்த மன்னன், அவர் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்தில் கோவில் கொண்ட ஈசுவரருக்கு இருதயாலீசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது. பின்னர் மன்னர் காஞ்சி சென்று, தாம் அமைத்த கைலாசநாதர் ஆலயத்திற்கு மகிழ்ச்சியுடன் குடமுழுக்கு செய்வித்தார். வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ள திருநின்றவூர் இருதயாலீசுவரர் சந்நிதியின் கருவறையில் ஈசன் இலிங்கத் திருமேனியின் அருகே பூசலார் நாயனாரின் திரு உருவமும் காட்சியளிப்பது சிறப்பு!

ஈசனார் மீது பூசலார் நாயனார் கொண்ட மெய்யன்பு திருமந்திரத்தில், “ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே” என்பதற்கு ஈடாகும். கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றாக, கல்வெட்டுகளில், “அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்” “அவன் சிறந்த சிவபக்தன்”, “ஆகமப்பிரியன்” என்னும் புகழாரங்களும் இருத்தல் பூசலார் நாயனார் திருத் தொண்டின் பெருமையை நிலைநாட்டுவதாம்.

இதன் விளக்கமாக, ஐயன் வள்ளுவனின் குறள் காண்போம்;

குறள் 665:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

தமது எண்ணம், செயல் திறன் ஆகியவற்றால் சிறப்புற்று மாட்சிமைப்பட்டோரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசரிடமும் சென்றடைந்து மதித்துப் போற்றப்படும்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் வண்ணம்….

ramanujarஸ்ரீராமானுசர் ஒரு முறை உஞ்சவிருத்தி செய்தபடி தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சில குழந்தைகள் மணல் கோயில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகள் கட்டிக்கொண்டிருந்த ஆலயத்தில் கொடிமரம், அர்த்த மண்டபம், கருவறை, முன் மண்டபம், சுற்றுச் சுவர் போன்ற அனைத்தும், சிறு குச்சிகள், கோடுகள், பொடிக்கற்கள் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த மரத்தின் இலையில், அதே மண்ணை வைத்து, பிரசாதமாக நைவேத்தியமும் வைத்து வழிபட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமானுசருக்கு மெய் சிலிர்த்ததோடு அவர் கண்ணிமைக்காது நின்றிருந்தார். மூலவருடன் மிக விளையாட்டாக கட்டப்பட்டிருந்த கோவிலாக இருந்தாலும், அக்குழந்தைகளின் பக்தியில் எந்த குறைபாடும் இருக்கவில்லை. அதே ஆழ்ந்த பக்தியுடன், ராமானுசரிடம் நெருங்கி வந்த குழந்தைகள் அன்பொழுக, ‘சாமி இந்தாங்க உங்களுக்கும் பிரசாதம்’ என்று கொடுத்தனர். கள்ளங்கபடமில்லாத அக்குழந்தைகள் அளித்த பிரசாதத்தை தம் உஞ்சவிருத்தி சொம்பில் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இறைவனை உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாகக் காணும் திருக்கோலமே உண்மையான இறைத் திருமேனி. உளமாற போற்றிப்பாடும் வார்த்தைகளே அவர்தம் திருநாமம். மகிழ்ச்சியால் பெரிதும் பூரிப்படைந்திருந்த ராமானுசர் அக்குழந்தைகளின் உருவத்தில் பெருமாளையேக் காண்கிறார்.

தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.

என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகவே இக்குழந்தைகளின் செயலைக் கண்டார் ராமானுசர்!

நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளை
நாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.

அதாவது, அன்பர் பூசலார் நீண்ட நாட்களாக நினைந்து உருவாக்கியுள்ள ஆலயத்திற்குள் நாளைப்புக
முடிவெடுத்துள்ளோம். அதனால் உன் நிகழ்ச்சியை பின்னொரு நாளில் தள்ளி வைத்துக்கொள்வாயாக.. என்று சொல்லிப்
போனார்.

சங்கரனார் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு
பேரரசனால் கட்டப்பட்ட கோயில் எந்த அளவிலும் இணையாகாது என்பதை உணரச் செய்தார்.

சேக்கிழார் திருவாக்கில், “சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட்
கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்”
என்பதையும் அறியலாம்.

நித்திரையிலிருந்து சட்டென விழித்த மன்னனுக்கு பேராச்சரியம். ஆண்டவன் வாக்கு பொய்யாகாதே. ஆயினும் தாம்
எழுப்பியுள்ள ஆலயத்தைக்காட்டிலும் சிறந்ததொரு ஆலயம் எப்படி தன் கவனத்திற்கு வராமல் போனது என்று
அதிசயித்தவாறு, உடனே அப்படிப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும் என்று தேடிச் சென்றான் பல்லவ மன்னன். வழியில் கண்ட ஒரு விவசாயியிடம் இதுபற்றி விசாரித்தபோது, ‘இலுப்பை மரத்தடியில் பித்தர் ஒருவர் கோயில் கட்டுவதாக பிதற்றிக் கொண்டிருந்தார் , அவரைப் போய் கேளுங்கள்’ என்று சொன்னார். அவரைச் சென்று பார்த்த மன்னன் அதிர்ந்து போனான்.

வேதியரை வீழ்ந்து வணங்கினான் வேந்தன். பின் பூசலாரின் எண்ணமும், அவர்தம் பக்தியின் ஆழமும் அறிந்த மன்னன், அவர் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்தில் கோவில் கொண்ட ஈசுவரருக்கு இருதயாலீசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது. பின்னர் மன்னர் காஞ்சி சென்று, தாம் அமைத்த கைலாசநாதர் ஆலயத்திற்கு மகிழ்ச்சியுடன் குடமுழுக்கு செய்வித்தார். வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ள திருநின்றவூர் இருதயாலீசுவரர் சந்நிதியின் கருவறையில் ஈசன் இலிங்கத் திருமேனியின் அருகே பூசலார் நாயனாரின் திரு உருவமும் காட்சியளிப்பது சிறப்பு!

ஈசனார் மீது பூசலார் நாயனார் கொண்ட மெய்யன்பு திருமந்திரத்தில், “ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே” என்பதற்கு ஈடாகும். கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றாக, கல்வெட்டுகளில், “அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்” “அவன் சிறந்த சிவபக்தன்”, “ஆகமப்பிரியன்” என்னும் புகழாரங்களும் இருத்தல் பூசலார் நாயனார் திருத் தொண்டின் பெருமையை நிலைநாட்டுவதாம்.

இதன் விளக்கமாக, ஐயன் வள்ளுவனின் குறள் காண்போம்;

குறள் 665:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

தமது எண்ணம், செயல் திறன் ஆகியவற்றால் சிறப்புற்று மாட்சிமைப்பட்டோரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசரிடமும் சென்றடைந்து மதித்துப் போற்றப்படும்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் வண்ணம்….

ஸ்ரீராமானுசர் ஒரு முறை உஞ்சவிருத்தி செய்தபடி தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சில குழந்தைகள் மணல் கோயில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகள் கட்டிக்கொண்டிருந்த ஆலயத்தில் கொடிமரம், அர்த்த மண்டபம், கருவறை, முன் மண்டபம், சுற்றுச் சுவர் போன்ற அனைத்தும், சிறு குச்சிகள், கோடுகள், பொடிக்கற்கள் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த மரத்தின் இலையில், அதே மண்ணை வைத்து, பிரசாதமாக நைவேத்தியமும் வைத்து வழிபட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமானுசருக்கு மெய் சிலிர்த்ததோடு அவர் கண்ணிமைக்காது நின்றிருந்தார். மூலவருடன் மிக விளையாட்டாக கட்டப்பட்டிருந்த கோவிலாக இருந்தாலும், அக்குழந்தைகளின் பக்தியில் எந்த குறைபாடும் இருக்கவில்லை. அதே ஆழ்ந்த பக்தியுடன், ராமானுசரிடம் நெருங்கி வந்த குழந்தைகள் அன்பொழுக, ‘சாமி இந்தாங்க உங்களுக்கும் பிரசாதம்’ என்று கொடுத்தனர். கள்ளங்கபடமில்லாத அக்குழந்தைகள் அளித்த பிரசாதத்தை தம் உஞ்சவிருத்தி சொம்பில் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இறைவனை உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாகக் காணும் திருக்கோலமே உண்மையான இறைத் திருமேனி. உளமாற போற்றிப்பாடும் வார்த்தைகளே அவர்தம் திருநாமம். மகிழ்ச்சியால் பெரிதும் பூரிப்படைந்திருந்த ராமானுசர் அக்குழந்தைகளின் உருவத்தில் பெருமாளையேக் காண்கிறார்.

தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.

என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகவே இக்குழந்தைகளின் செயலைக் கண்டார் ராமானுசர்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.